தமிழ் திரையுலகில் தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வரும் பாடகர் பிரதீப் குமார். திருச்சியை சேர்ந்த இந்த இளைஞர் கர்நாடக சங்கீதத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பின்னர் சினிமாவில் பல பாடல்களை தனது இனிமையான குரலில் பாடி அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டவர். அவரின் குரலில் ஒலிக்கும் பாடல்கள் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். 


 



பிரதீப் குமார் குரலில் மனதை மயக்கும் பாடல்கள்: 


மறந்தாயே மறந்தாயே, கோடி அருவி கொட்டுதே, மயிலாஞ்சி, மாயநதி, கண்ணம்மா, ஆகாயம் தீ பிடிச்சா என பல மனதை வருடும் அசத்தலான பாடல்களின் குரலுக்கு சொந்தமானவர் இவரே. பல ஹிட் பாடல்களை  கொடுத்த இந்த பாடகர் தனது திறமையை நேரடியாக வெளிப்படுத்தி பார்வையாளர்கள் அனைவரையும் கட்டிப்போட தற்போது தயாராகிவிட்டார். ஆம் லைவ் பெர்ஃபார்மென்ஸ் கான்செர்ட் ஒன்றின் மூலம் மேஜிக் செய்யவுள்ளார் இந்த பாடகர். 


 






 


பிரதீப் குமாருடன் புத்தாண்டு கொண்டாட்டம்: 



நாய்ஸ் & க்ரெயின்ஸ் வழங்கும் லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சி சென்னையில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் ஒரு நிகழ்ச்சியாக டிசம்பர் 31ம் தேதி மாலை சென்னை நேரு அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. 'பிரதீப் குமாரின் மாயநதி' எனும் இந்த லைவ் கான்செர்ட்டில் நீங்கள் பார்வையாளராக கலந்து கொள்வதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. 


டிக்கெட்களை பெற விரும்புவோர் https://bit.ly/Pradeepkumarsmayanadhi எனும் இணையத்தளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். 


 






 


இந்த 2023 புத்தாண்டை இசையோடு தொடங்கி வரவிருக்கும் ஆண்டை ரம்மியமாக்க தயாராகுங்கள்.