கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி இயக்குனர் மணிரத்னம் பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்கியுள்ள ’பொன்னியின் செல்வன்’(Ponniyin Selvan) திரைப்படம் இன்று உலகம் முழுவதும்  வெளியாகியுள்ளது.


படம் மொத்தம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள நிலையில், விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா, பார்த்திபன் என பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளது. பிரபல இசையமைப்பாளர் இசைப்புய ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் ஏற்கெனவே பாடல்கள் செம ஹிட் அடித்துள்ளன.


படத்தின் முதல் காட்சி முன்னதாக நிறைவடைந்துள்ள நிலையில், ட்விட்டர்வாசிகள் ரிவ்யூக்களை பகிர்ந்து தள்ளி வருகின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை படம் பூர்த்தி செய்ததா எனப் பார்க்கலாம்!