கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி இயக்குனர் மணிரத்னம் பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்கியுள்ள ’பொன்னியின் செல்வன்" திரைப்படம் இன்று உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.


படம் மொத்தம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள நிலையில், விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா, பார்த்திபன் என பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளது. இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


1955ஆம் ஆண்டு புத்தகமாக வெளியான இந்த நாவல் கிட்டத்தட்ட 67 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்தின் கடும் முயற்சியால் திரைக்கு வந்துள்ளது. படத்துக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கிய நாள் பரபரவென டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து இன்றைய நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் தவமிருந்தனர். அவர்களது எதிர்பார்ப்புகளை படம் பூர்த்தி செய்ததா எனப் பார்க்கலாம்...