‘பாபநாசம்’ பட  நடிகை எஸ்தர் அனில் பாத் டப்பில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் புகைப்படம் சமூகவலைதளங்கில் வைரலாகியும் வருகிறது.


மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய எஸ்தர் அனில், கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது  மகளாக நடித்து தமிழ் மக்களின் மனதைக் கொள்ளையடித்தவர். இதற்கு முன்பு மலையாளத்தில் மோகன் லால் நடித்த ‘த்ரிஷ்யம்’ படத்தில் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லால்


தற்போது 20 வயதை எட்டியுள்ள எஸ்தர், தற்போது இருக்கும் ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை அவ்வப்போது நடத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்கள்  பின்தொடர்கின்றனர். 


இந்த நிலையில், எஸ்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்ககத்தில், குளியல் தொட்டியில் இருந்து தனது கையால் இதயத்தை அடையாளப்படுத்தும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது அவரைப் பின்தொடர்பவர்களுடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 


 






சமீபத்தில் மோகன்லாலின் 'த்ரிஷ்யம் 2' படத்தில் நடித்த இளம் நடிகை தற்போது ஒரு சில மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.