Nivetha Pethuraj: நடிப்பு மட்டுமல்ல விளையாட்டிலும் நான் கில்லி.. அசத்திய நிவேதா பெத்துராஜ்!
'ஒரு நாள் கூத்து' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். மதுரையில் பிறந்த இவர் அந்த படத்தில் இடம்பெற்ற அடியே அழகே பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் பேட்மிண்டன் விளையாட்டில் தான் பதக்கம் வென்ற புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
'ஒரு நாள் கூத்து' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். மதுரையில் பிறந்த இவர் அந்த படத்தில் இடம்பெற்ற அடியே அழகே பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். 2015 ஆம் ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்ற நிவேதா மாடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக அவர் சினிமாவிலும் அறிமுகமானார். பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
Just In




இதேபோல் தெலுங்கில் மெண்டல் மதிலோ, சித்ரலேகாரி, ப்ரோச்சேவரவருரோ, அல வைகுண்டபுரம், ரெட், பாகல், விரட்டா பருவம், ப்ளடி மேரி, தஸ் கா தம்கி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே நிவேதா பெத்துராஜ் கார் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பெரும்பாலும் ஆடவர்கள் மட்டுமே பங்கேற்கும் ஃபார்முலா கார் ரேஸ் பயிற்சி முடித்துள்ளார். அவருக்கு ஸ்போர்ட்ஸ் கார்கள் மீது ஆர்வம் அதிகம். அதனால் 2015 ஆம் ஆண்டு "Dodge Challenger" என்ற காரை வாங்கியிருந்தது அனைவரும் அறிந்த விஷயம். அதேசமயம் கோவையில் நடைபெற்ற ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ் ரேஸிங் பயிற்சியில் கலந்து கொண்டு அசத்தினார்.
இந்நிலையில் பேட்மிண்டன் போட்டியிலும் நிவேதா பெத்துராஜ் அசத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் நடிப்பு, பிற தொழில்களில் திரைப் பிரபலங்கள் கவனம் செலுத்தி வரும் சிலர் மட்டுமே விளையாட்டில் கவனம் செலுத்தி வருவதோடு அசத்தியும் வருகின்றனர். அந்த வகையில் பேட்மிண்டன் போட்டியில் இரட்டையர் பிரிவில் பங்கேற்ற நிவேதா பெத்துராஜ் அதில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். டால்ஃபின் ஸ்போர்ஸ் மேனேஜ்மென்ட் நடத்திய இந்த பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணிக்காக கலந்து கொண்ட நிவேதா வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
இதனைப் பார்த்த இணையவாசிகள், “மதுரை பொண்ணுன்னா சும்மாவா”, “மதுரை பொண்ணை எதிர்த்தா என்னன்னு பார்த்துக்கோங்க” என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.