நாகினி சீரியல் புகழ் நியா, தன்னுடைய சம்பள பாக்கி குறித்து பேசியுள்ளார். சம்பள பாக்கியை வாங்குவதற்காக சிறுபிள்ளைதனமாக சண்டையிட வைத்தார்கள் என மனம் திறந்துள்ளார் நியா. இந்தி சின்னத்திரை உலகில் பிரபலமானவர் நியா சர்மா. நேகா சர்மாவாக சின்னத்திரைக்குள் நுழைந்த இவர் தன் பெயரை நியா சர்மா என மாற்றிக்கொண்டார். இந்தி சீரியல்களில் நியா இல்லாமல் இருக்க மாட்டார் என்பதுபோல எல்லா சீரியலிலும் முகம் காட்டினார். 






சீரியல்களை விடவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கம் மூலமே அதிக பிரபலமானார் நியா. அவர் பதிவேற்றும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாவதும் உண்டு. கிட்டத்தட்ட 7 மில்லியன் பாலோவர்ஸ்களுக்கு மேல் இன்ஸ்டாவில் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளார் நியா. அவ்வப்போது மனதில் உள்ளதை படாரென பேசிவிடுவது நியாவின் பழக்கம். அந்த வகையில் தன்னுடைய சம்பளத்தை வாங்க தான் சிறுபிள்ளைத்தனமான சண்டையெல்லாம் செய்ய வேண்டி இருந்ததாக பேசியுள்ளார் நியா. நடித்துவிட்டு சம்பளம் வாங்க ஸ்டூடியோவுக்கு வெளியே காத்திருக்க வேண்டி இருக்கும் என மனம் திறந்துள்ளார். 






 


முன்னதாக தன்னுடைய நண்பர்களே தன்னை பாடி ஷேமிங் செய்வதாக மனம் குமுறி இருந்தார் நியா. "தான் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றுகிறேன். சற்று கவர்ச்சியாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். இதனைப் பார்க்கும் என் நண்பர்களே என்னை பாடி ஷேமிங் செய்கிறார்கள். நீ ஏன் நிர்வாணமாக வருகிறாய் எனக் கேட்கிறார்கள். கவர்ச்சி எப்படி நிர்வாணம் ஆகும். என்னுடைய உடை குறித்து பேச அவர்கள் யார்? யாரென்றே தெரியாத சில சோஷியல் மீடியாவில் படுமோசமான கமெண்ட் செய்கிறார்கள். அதைவிட நண்பர்களே பாடி ஷேமிங் செய்வதுதான் வருத்தமாக உள்ளது" என்றார். நேர்காணல் ஒன்றில் மனக்குமுறலை கொட்டிய நியாவுக்கு ரசிகர்கள் பலர் அப்போதே ஆதரவு கமெண்டுகளை பதிவிட்டு இருந்தனர்