VJ Chitra death: 'சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதிக்கு தொடர்பு; என் உயிருக்கு ஆபத்து' - கணவர் ஹேம்நாத் புகார்

சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அரசியல்வாதி ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் ஹேம்நாத் குற்றம் சாட்டியுள்ளார்

Continues below advertisement

சின்னத்திரையில் விஜேவாக அறிமுகமான சித்ரா பல சீரியல்களில் நடித்திருந்தாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார். எதிர்பாராத விதமாக கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக வந்த  தகவல் சித்ராவின் குடும்பத்தை மட்டுமில்லாது, முல்லையின் ரசிகர்களுக்கு பேரிடியாக இருந்தது.

Continues below advertisement

சித்ரா காதலித்து வந்த ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் ஆன 3 மாதங்களிலேயே ஏன் இவர் தற்கொலை செய்துக்கொண்டார்? காரணம் என்ன? என்பது குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அரசியல்வாதி ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் ஹேம்நாத் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹேம்நாத், சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதியின் தொடர்பு இருப்பதாகவும், அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், இது குறித்து காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அவர் அளித்திருக்கிறார். இதனால், சித்ரா மரண வழக்கில் பல மர்மங்கள் இருப்பது உறுதியாகி உள்ளது. 

சித்ராவின் மரணத்துடன் தொடர்புடைய அரசியல்வாதியின் பெயரை வெளியிட மறுத்த ஹேம்நாத், இந்த தகவலை மற்றும் பகிர்ந்திருக்கிறார். இது சம்பந்தமாக வேறு ஏதேனும் தகவலை வெளியே சொன்னால், தனது உயிருக்கு பாதிப்பு இருக்கும் என தெரிவித்திருக்கிறார். இதனால், காவல் துறையினர் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், சித்ராவின் மரணத்தை திட்டமிட்டு செய்த மாஃபியா கும்பலை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 


பிற முக்கியச் செய்திகள்:

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola