Neeya Naana : இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில், டிரெண்டியான தாத்தா பாட்டி மற்றும் இந்த தலைமுறை இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். 


நீயா நானா


பிக் பாஸ், அது இது எது, ஸ்டார் மியூசிக் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது விஜய் தொலைக்காட்சி. அந்த நிகழ்ச்சிகளில் ஒன்றுதான “நீயா நானா”. சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை, சாதாரண மனிதர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, ஆராயும் நிகழ்ச்சிதான் நீயா நானா. 


வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பப்பராகும் இந்த ஷோவை கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை பலதரப்பட்ட தலைப்புகள் குறித்து பேசப்பட்டு வருகிறது.  அந்த வகையில், இந்த வாரம் ‘டிரெண்டியான தாத்தா பாட்டி மற்றும் இந்த தலைமுறை இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த வாரத்திற்குரிய ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
 


"மனதிற்கு பிடித்ததை செய்வோம்”


அதில், டிரெண்டியாக இருக்கும் தாத்தா பாட்டிகள் கூறுவது என்னவென்றால், தங்களுக்கு மனதிற்கு பிடித்ததை நாங்கள் செய்கிறோம். எங்களை பொறுத்தவரை வயது என்பது ஒரு நம்பர்தான். வயதாகி விட்டது என்பதால், எங்கள் பேச்சையோ, ஆடைகளையோ மாற்றிக்கொள்ள முடியாது. நாங்கள் எங்களுக்கு பிடித்தபடி சுடிதார், டி ஷர்ட் போன்ற ஆடைகள் அணிந்தால் இளம் வயதினர் போன்று இருக்கிறோம். 


இது எங்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அதிலும் ஒரு சிலர் தங்களின் மகள் அல்லது மருமகளின் ஆடைகள், அவர்களின்  மேக்கப் பொருட்களை நாங்கள் பயன்படுத்தி  எங்களை டிரெண்டாக வைத்துக் கொள்வோம் என்று கூறினர். ஆனால், இவர்கள் டிரெண்டாக மாறியதால் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று சில  இளைஞர்கள் கூறி வருகின்றனறர்.


’தக் லைஃப்' கொடுத்த கோபிநாத்


இந்நிலையில், தற்போது வெளியான ப்ரோமில், குறிப்பாக ஒரு பெண், நைல் பாலிஸில் இருந்து, லிப்ஸ்டிக்கில் இருந்து, மேக்கப்பில் இருந்து, ஹேர் ஸ்டைல் மாறியது வரை எல்லாமே என்னுடைய மருமகள் தான்.


இதையெல்லாம் சென்னையில போட முடியவில்லை. அதனால இந்த மாதிரி ஃபங்ஷன் எல்லாம் வந்தேன்னா போடுவேன் என்று சொல்ல, அதைக் கேட்டு கோபிநாத் இது ஃபங்ஷனா...? என்று ’தக் லைஃப்' கொடுத்து பரவாயில நீயா நானாவை ஃபங்ஷன் ஃபீலிங்கில் வைத்திருக்கிறேன் என்று கேட்கும்போது சந்தோஷமாதான் இருக்கும் என்று பேசியிருக்கிறார். 


குதூகலத்தில் அரங்கம்


இதுபோன்று விவாதம் நடந்துகொண்டு இருக்கையில், பாட்டி ஒருவர் கோபிநாத் உடன் நடனமாடி உள்ளார். இது அரங்கத்தையே ஒரு விதமான Vibe-க்கு கொண்டு சென்று, அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இது சம்பந்தமான ப்ரோமோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  எப்போதும் ஒரு பரபரப்பான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இந்த வாரம் ஒரு கலகலப்பான விவாதம் நடைபெற்றுது என்பது குறிப்பிடத்தக்கது.