நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தனது திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு தங்கம் வெள்ளி நாணயங்களை பரிசாக கொடுத்துள்ளனர். 






முன்னதாக, இந்திய திரையுலகின் பிரபல நடிகையும், லேடி சூப்பர்ஸ்டாருமானவர் நயன்தாராவும் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.


 






இந்தத்திருமணத்தில் நடிகர்கள் ரஜினி, கார்த்தி, சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் பங்கேற்றனர். திருமணம் முடிந்த உடன் நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் திருப்பதி செல்வார்கள் என்று தொடர்ந்து தகவல் வெளியாகி வந்த நிலையில், நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் வால்வோ காரில் சென்னையில் இருந்து நேரடியாக திருப்பதி சென்றனர்.  


 






சமீபகாலங்களில் நயன்தாரா – விக்னேஷ்சிவன் ஜோடி அடிக்கடி திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, திருமணம் முடிந்த பிறகு முதன்முறையாக இருவரும் புதுமணத்தம்பதிகளாக திருப்பதி வெங்காடசலபதி ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண