சென்னையில் தான் வசிக்கும் இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தும் சிறுவர்கள் செய்யும் அட்டகாசத்தை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். 

Continues below advertisement

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பட்டாக்கத்தையை கொண்டு சிறுவர்கள் வெட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரயிலில் பயணம் செய்த நபரை மிரட்டி அவரை இறங்க செய்து அருகிலுள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வடக்கு மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்து நடந்த சம்பவம், அதுதொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விளக்கமளித்தார். எதிர்க்கட்சிகளும் இந்த சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இப்படியான நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், “சென்னையில் கடந்த பத்தாண்டுகளாக நான் வசித்து வருகிறேன், குறிப்பாக இரவில் போதைப்பொருள் அதிகமாக இருக்கும் குண்டர்கள் மற்றும் குற்றவாளிகள் நிறைந்த ஒரு பகுதியில். எனது ஸ்டுடியோ தளத்தில் உள்ள பல அப்பாவி கட்டுமானத் தொழிலாளர் நண்பர்கள் சமீபத்தில் பல முறை தாக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அத்தகைய குற்றவாளி ஒருவர், காவல்துறையினர் எல்லை மீறி கல்லெறிந்தபோது எந்த வலியும் இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார்.

Continues below advertisement

மேலும், இந்த தாக்குதல் நடத்தியவர்களில் பெரும்பாலோர் பெருமைமிக்க இனவெறி பிடித்தவர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களை வெறுப்பு/தாக்குதல் நடத்துபவர்கள். பல உள்ளூர் அரசியல் பிரிவுகளும் பல 'சாதி' அடிப்படையிலான குழுக்களும் இந்த பெரும்பாலும் இளம் சிறுவர்களை ஆதரிக்க ஓடி வருகிறார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது. 

இந்த சம்பவங்களின் யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டு, இன்னும் யதார்த்தமாக செயல்பட்டு, பல பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியுமா? திரையில் மகிமைப்படுத்தப்பட்ட வன்முறைக்கும் சமீபத்தியது போன்ற உண்மையான சம்பவங்களுக்கும் இடையிலான கோடுகள் உண்மையில் மங்கலாகத் தொடங்கியுள்ளன, மேலும் நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. நானும் இதில் அடங்கும்” என சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.