இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்  இன்று தற்கொலைக்கு முயன்ற ஒருவரின் உயிரை காப்பாற்றிய ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இந்திய சினிமாவை தனது இசையால் கலக்கிக் கொண்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் பலருக்கும் இன்றளவும் பேவரைட் ஆக உள்ளது. எல்லாவிதமான இசையையும் அழகாக அடுக்கி ஒரு பாடலைப் போல இன்னொரு பாடல் இல்லாத வண்ணம் மேஜிக் மியூசிக்கை ரசிகர்களுக்கு கொடுப்பார். அவரது இசையால் பிரபலமான படைப்புகளுக்கு பெருமை சேர்த்து ஆஸ்கார் விருது வென்று அசத்தினார். இப்படியான நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஒரு உயிரைக் காப்பாற்றியுள்ள தகவல் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. 


மலேஷியாவைச் சேர்ந்த இசையமைப்பாளரான செல்வகுமார் என்பவர் தான் அந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார். அதில், ‘2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி நள்ளிரவு நான் தற்கொலைக்கு முயற்சித்தேன். அப்போது  திடீரென்று  என் நண்பரிடம் இருந்து எனக்கு மெசெஜ் வந்தது. அந்த செய்தியில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த பாடலை கேட்க வேண்டும். கண்டிப்பாக உனக்கு பிடிக்கும் என தெரிவித்திருந்தார். 


அந்த பாடல் ஓகே கண்மணி படத்தில் இடம் பெற்ற ‘நானே வருகிறேன்’ பாடல். (பலருக்கும் "சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே"  என்ற வரியை சொன்னால் நியாபகம் வரும்). அதனைக் கேட்டப் பிறகு என் மனம் எப்படி மாறியது என்று தெரியவில்லை. வீட்டிற்குச் சென்று எனது ஹெட்ஃபோன்கள் மூலம் கிட்டத்தட்ட 48 மணிநேரம் திரும்பத் திரும்பக் கொண்டு என் அறையில் பூட்டிக் கொண்டேன். விட்டுக்கொடுக்காத  வாழ்க்கை எவ்வளவு மதிப்புள்ளது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். 


எனது இசையை என்னால் காப்பாற்ற முடியவில்லை என்ற பயம் இருக்கும் வரை,  எனது இசை வாழ்க்கையில் தோல்விகளை சந்திக்கிறேன். அந்த பாடல் நான் இருந்த இடத்தில் நான் இல்லை என்பதை உணர வைத்தது. உண்மையில் என் உயிரைக் காப்பாற்றியது. இந்த பாடல் ஒரு வாழ்க்கையை விட அதிக மதிப்புள்ளது. எனது வாழ்க்கைக்கு ஒரு நாள் இருக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் என்னை காயப்படுத்த எத்தனை முட்கள் காத்திருந்தாலும் நான் இன்னும் நடந்து கொண்டே இருப்பேன்’ என பதிவிட்டு இருந்தார். 


இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், “எல்லா புகழும் இறைவனுக்கே!  வாழ்க வளமுடன்” என தெரிவித்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.