அவரோட இசைக்கு பெரிய பவர் இருக்கு...டி.ஆர் பற்றி ஏ.ஆர் ரஹ்மான்

டி. ராஜேந்தர் இசை கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவரது இசைக்கும் பெரிய பவர் இருப்பதாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்

Continues below advertisement

ஒவ்வொரு காலத்திலும் ஒரு டிரெண்ட் செட்டர் இயக்குநர்கள் சினிமாவில் வந்து போகிறார்கள். இன்றைய 2 கே கிட்ஸ் மத்தியில் பிரதீப் ரங்கநாதன் ட்ரெண்ட் செட்டராக இருப்பது போல் 80 களில் இளம் தலைமுறை மத்தியில் டிரெண்ட் செட்டராக இருந்தவர் டி.ராஜேந்தர்.

ஒரு தலை ராகம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான டி.ஆர் அடுத்த பத்து ஆண்டுகளில் அதிகம் கொண்டாடப்பட்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தார். என் தங்கை கல்யாணி , மைதிலி என்னை காதலி , ஒரு வசந்த கீதம் என ஹிட் படங்களை இயக்கியது மட்டுமில்லாமல் இசையமைப்பாளர், பாடகர் , பாடலாசிரியர் ஒளிப்பதிவாளர் என டி.ஆர் தொட்டதெல்லாம் தங்கமானது. டி.ஆர் பாடிய பாடல்கள் வைப் மெட்டீரியலாக மாறின. 

Continues below advertisement

டி.ஆர் பற்றி ஏ ஆர் ரஹ்மான்

இன்று டி.ஆர் இணையத்தில் பெரும்பாலும் ட்ரோல் செய்யப்படுகிறார் என்றாலும் பல துறைகளை திறமையாக கையாண்ட அவரது திறமையை பலர் தொடர்ந்து வியந்து பேசி வருகிறார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் டி.ஆரின் இசையை பாராட்டி பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நீயா நானா கோபிநாத் உடனான நேர்காணலில் சமீபத்தில் ரஹ்மான் கலந்துகொண்டார். இந்த தன்னுடைய சீனியர்களிடம் தான் கற்றுக்கொண்டது பற்றி ரஹ்மான் பேசினார். " எம்.எஸ்.வியிடம் நான் பணியாற்றியிருக்கிறேன். தமிழ் மொழியை குழைத்து அதை அவரது இசையில் கொண்டு வருவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதேபோல் டி.ஆரின் இசை நேராக இதயத்தில் இருந்து வருவது . அவர் இசை கற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அவரது இசைக்கு பெரிய பவர் இருக்கு. இளையராஜாவின் இசைப் பற்றி எல்லாருக்கும் தெரியும் ஆனால் இளையராஜாவிடம் நான் கற்றுக் கொண்ட முக்கியமான இன்னொன்று இருக்கு. அப்போது எல்லாம் கம்போசிங் முடிந்ததும் எல்லாரும் குடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். கட்டியிருக்கும் வேட்டி அவிழ்ந்து வீட்டிற்கு போய் மனைவியிடம் கலவரம் செய்யும் அளவிற்கு குடித்திருப்பார்கள். ஆந்த சூழலை மாற்றி அனைவருக்கும் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தவர் இளையராஜாதான். இளையராஜாவின் குழுவில் வாசிக்கிறோம் என்றால் மற்றவர்கள் மரியாதையாக நம்மை மரியாதையாக நடத்துவார்கள். அந்த மரியாதையை உருவாக்கியவர் அவர்தான். இந்த கலைக்கு அவர் மதிப்பு கொடுத்ததை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்." 

Continues below advertisement
Sponsored Links by Taboola