’நாகினி' சீரியல் மூலம் பிரபலமானவர் இந்தி நடிகர் மௌனி ராய். இவர் தனது நீண்டநாள் பாய்பிரண்டான சுராஜ் நம்பியாரை கடந்த ஜனவரி மாதம் 27 ம் தேதி கோவாவில் திருமணம் செய்து கொண்டார். பாலிவுட் மட்டும் அல்லாது தமிழ்நாடு வரை இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. 


கடந்த ஆண்டு, நடிகை மௌனி ராய் துபாய் தொழிலதிபர் சூரஜ் நம்பியாருடன் காதல் உறவில் இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அப்பொழுது இதுகுறித்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. தொடர்ந்து, இருவரும் அவ்வபோது தங்களின் காதலில் வெளிப்பாடாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வந்தனர். 


சமீபத்தில், இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் அந்த புகைப்படங்கள் இந்தியா முழுவதும் படு வைரலானது. தற்போது, மௌனி ராய் மற்றும் சூரஜ் நம்பியார் திருமணம் முடிந்த கையோடு காஷ்மீர் சென்று ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர். 






ஹனிமூன் சென்ற மௌனி ராய் முதலில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வந்தார். அதனைதொடர்ந்து பனியில்உலா வரும் தேவதையாய் போஸ் கொடுத்தார். 






தற்போது, திருமணத்திற்கு பிறகு ஒரு படி மேலே ஏறி கருப்பு நிற பிகினி உடையில் எடுத்துகொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், முத்தங்கள் பனித்துளிகள் என்றால் நான் உங்களுக்கு ஒரு பனிப்புயல் அனுப்புவேன் என்றும், வெளியே அதிபயங்கர குளிர் என்றும் பதிவிட்டுள்ளார். 






தற்போது, இந்த புகைப்படங்கள் வேகமாக வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண