நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்த கருத்துகள் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இயக்குநர் மோகன் ஜி அவருக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக, நீட் தேர்வு மற்றும் மதிப்பெண் முறை குறித்து வெற்றிமாறன் பேசிய கருத்துகளை சுட்டிக்காட்டி தனது எதிர்வினையை எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

ஜூலை 23-ஆம் தேதி சென்னை நடைபெற்ற நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய வெற்றிமாறன், "மாணவர்கள் போராட்டத்திற்கு வந்துவிட்டார்கள் என்றால் அது அரசின் தோல்வி. நீட் தேர்வு மூலம் மருத்துவக் கல்வியையும், மருத்துவ அறிவையும் நம்மிடமிருந்து பறிக்க முயற்சிக்கிறார்கள். என் நண்பரின் மகன் அதிக மதிப்பெண் எடுத்திருந்தும் நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் பெற முடியாததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. நீட் தேர்வை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

மோகன் ஜி விமர்சனம் 

இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்ட நிலையில், இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பதிவில், "வெற்றிமாறன் அண்ணே... 1200 மதிப்பெண் எல்லாம் 2018-லேயே மாற்றி 600 மார்க் கொண்டு வந்தாச்சு. கடமைக்கு ஏன் இந்த மேடைக்கு போறீங்க? ரெண்டு பொருள உருவி, மேல ஒன்னு போட்டா சரியா போதும்னு பேசுறது தான் நமக்கு சரியா? நீட் எல்லாம் வேணாம்னா, படிக்கிற பசங்க அதுவா பிழைச்சிக்கும்" என்று .

Continues below advertisement

மேலும், நீட் குறித்து பேசுபவர்கள் முதலில் அதன் அடிப்படை விவரங்களை சரியாக அறிந்திருக்க வேண்டும் என்பதையும், வெறும் மேடைப் பேச்சுக்காக தவறான தகவல்களை கூறக்கூடாது என்பதையும் மோகன் ஜி தனது பதிவின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.