Meera mithun Video: என் முகத்த வெச்சு செக்ஸ் தொழில் பண்றாங்க - மீரா மிதுன்

மன அழுத்தம் ஏற்பட்டால் பாத் டப்பில் மூழ்கி என்ன நான் ரிலாக்ஸ் ஆக்கிக்குவேன் என மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

சென்னையில் இருப்பதற்கே எனக்கு பிடிக்கவில்லை எனவும், என் முகத்த வெச்சு செக்ஸ் தொழில் பண்றாங்க என சர்ச்சைக்கு பெயர் போன மீரா மிதுன் குற்றம் சாட்டியுள்ளார்.

Continues below advertisement

 சென்னையில் பிறந்த மீரா மிதுன், மாடலிங் துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். இத்துறையில் சக போட்டியாளருடன் ஏற்பட்ட பிரச்சனையில் புகார் அளிக்க வந்ததன் மூலம் முதன் முதலில் பொது வெளிச்சத்திற்கு வந்தவர் தான் மீரா மிதுன். குறிப்பாக அவரை மிரட்டி ஆள்வைத்து அடிக்க பேசிய மெசேஜ் மூலம் பிரபலம் ஆனார். இதனையடுத்து சினிமாவில் கால்பதித்த மீரா மிதுன்,  பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். இதில் பிக்பாஸ் சேரன் மற்றும் தொகுப்பாளர் கமல்ஹாசன், அஜித், விஜய் போன்றவற்றவர்கள் மீது விமர்சனம் வைத்து ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டார். இப்படி தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் மீரா மிதுன், சமீபத்தில் பட்டியல் இன மக்கள் குறித்த பேசிய கருத்து பெரும் விவாதப்பொருளான நிலையில் இவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிதவிக்கும் மீரா மிதுன், தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் பாத் டப்பினுள் அமர்ந்திருக்கும் படியாக இந்த வீடியோ அமைந்திருந்தது. அந்த வீடியோவில் தனக்கு சென்னையில் இருப்பதற்கே பிடிக்கவில்லை என்றும்,  இங்குள்ள அனைவரும் அன்பாக இருப்பது போல காதல் நாடகம் ஆடுவதோடு லவ் டார்ச்சர் செய்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.  

என்னைக் காதலிப்பதாக கூறுபவர்கள் யாரும், இதுவரை என்னை வெளியில் அழைத்து சென்றதில்லை. என்னுடன் இருந்ததில்லை, போன் செய்தும் பேசியதில்லை. ஆனால் சொசைட்டியில் பிரபலமாக என்னைப்பயன்படுத்துகிறார்கள் என தெரிவித்துள்ளார். இதோடு செக்ஸ் தொழிலில் ஈடுபடுவர்கள் என்னைப்போன்று சுற்றித்திரிவதும், முகநூலில் புகைப்படங்களை பகிர்வதைப்பார்க்கும் போது மன வேதனையாக உள்ளது என்றும், இதனால் என்னால் வெளியில் செல்லவே முடியவில்லை இதுவே எனக்கு ரொம்ப மன அழுத்தமாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் மற்ற மாநில மக்கள் மற்றும் வெளிநாட்டு மக்கள் பரவாயில்லை என் ஸ்டைல மட்டும் தான் யூஸ் பண்றாங்க.  ஆனால் சென்னை மக்கள் என்ன வெச்சு பொழப்பு நடத்துவதோடு என் முகத்த வெச்சு செக்ஸ் தொழில் பண்றாங்க என வீடியோவில் பேசியுள்ளார். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை எனவும், நான் என்னுடைய பேய காணோம் பட வெளியாகும் வரை சென்னையில் தான் இருப்பேன் என்றும், ரசிகர்களுடன் சேர்ந்து பட ரீலிஸைக் கொண்டாடுவேன் எனத் தெரிவித்துள்ளதோடு மன அழுத்தம் ஏற்பட்டால் பாத் டப்பில் மூழ்கி என்ன நான் ரிலாக்ஸ் ஆக்கிக்குவேன் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகும் நிலையில், மீரா மிதுன் மனநிலை பாதிப்படைந்து இதையெல்லாம் பேசி வருகிறார் என கமெண்ட்களை பதிவிட்டுவருகின்றனர்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola