நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். இளம் நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார். முதல் படமே மணிரத்னம் படம் என்பதால், அவர் மீதான பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அடுத்தடுத்து அவருக்கு பெரிய அளவில் ஓப்பனிங் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் இயக்குனர் முத்தையா இயக்கிய தேவராட்டம் படத்தில் நடித்தார் கவுதம் கார்த்திக். அதில் கதாநாயகியாக நடித்த மஞ்சிமா மோகனுடன் கவுதம் கார்த்திக்கு காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.






அதன் பின் அது பெரிய தொடர்கதையாக விமர்சிக்கப்பட்டது. இருவரும் அமைதியாக இருந்த நிலையில், அதன் பின் அதை ஆமோதிக்கும் விதமாக சமிக்ஞைகள் இருதரப்பிலும் வந்தது. இருவருக்கும் திருமணம் என்பது வரை செய்திகள் வந்துவிட்டன. இந்நிலையில், கவுதம் கார்த்திக் கொஞ்ச நாட்களாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அன்றாட மகிழ்வான தருணங்களை பதிவு செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, சற்று முன் ஒரு முக்கிய பதிவை வெளியிட்டார்.






அதில், சிலரின் போட்டோக்களை வெளியிட்டு, 


‛என் வாழ்க்கையில் இவர்கள் அனைவருக்கும் நன்றி’


என்று அந்த பதிவிற்கு கேப்ஷனும் வெளியிட்டிருந்தார். அதுவரை எந்த விமர்சனமும் வரவில்லை. ஆனால், அந்த போட்டோக்களுக்கு வாண்டடாக வந்து கமெண்ட் செய்திருக்கிறார் மஞ்சிமா மோகன். அந்த கமெண்டில்,


‛முதல் படம் உங்கள் உறவை விளக்குகிறது’


என்று அவர் அந்த படத்திற்கு கமெண்ட் செய்திருந்தார். போதாக்குறைக்கு சில ஸ்மைலி சிம்பளையும் அத்துடன் இணைத்திருந்தார். உடனே அதற்கு கமெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர் இருவரின் ரசிகர்களும். காதலர்கள் வாட்ஸ்அப் அல்லது வேறு ஏதாவது சாட் தளத்தில் விளையாடி மகிழலாம்; அதை விட்டுவிட்டு பொதுவெளியில் ஜாலியாக கலாய்த்து வருவது, பார்க்க ரசிக்கும் படியாக தான் உள்ளது.