தமிழ் சினிமாவில் மோசட் வான்டட் இயக்குநர்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தின் மூலம் கமல்ஹாசனுடனும் 'லியோ' படத்தின் மூலம் விஜயுடன் இணைந்து பணியாற்றி விட்டு லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் 'தலைவர் 171' படத்தின் மூலம் கூட்டணி சேர உள்ளார். இவர்களின் இந்த காம்போவில் உருவாகும் படம் குறித்த பரபரப்பு தான் தற்போது திரையுலக வட்டாரத்தில் உலாவி வருகிறது. 


 



நடிக்க மறுத்த ஷாருக்கான் :


லோகேஷ் கனகராஜ் தற்போது தனது எழுத்தாளர்கள் குழுவுடன் இணைந்து ஸ்கிரிப்ட்டுக்கு தேவையான கூடுதல் டச் கொடுத்து வருகிறார். இப்படத்தில் கூடுதல் ஸ்வாரஸ்யம் சேர்ப்பதற்காக பாலிவுட் திரையுலகை சேர்ந்த ஸ்டார் நடிகர் ஒருவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என யோசனை ஏற்பட்டுள்ளது. 
நெருங்கிய திரை வட்டாரத்தின் மூலம் வெளியான தகவலின் படி லோகேஷ் கனகராஜ் நடிகர் ஷாருக்கானை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவரை சந்தித்து பேசியுள்ளார் என கூறப்படுகிறது. ரஜினிகாந்த் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள ஷாருக்கான் அவருடன் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்தாலும் அந்த வாய்ப்பினை மிகவும் பணிவுடன் மறுத்துள்ளார். 


ஷாருக்கான் சொன்ன காரணம் :


பிரம்மாஸ்திரா, ராக்கெட்ரி மற்றும் டைகர் 3 உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்த பிறகு தனித்த படங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும் லோகேஷுடன் இணைந்து தனியாக ஒரு படத்தில் ட்ராவல் செய்யும் வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். நடிகர் ஷாருக்கானின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து அவரின் நிலையையும் புரிந்து கொண்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். 


 



தலைவர் 171ல் ரன்வீர் : 


மேலும் லோகேஷ் கனகராஜ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் 'தலைவர் 171' படத்தில் நடிப்பது குறித்து விவாதித்துள்ளார். ரன்வீர் படத்தில் அவரின் கேரக்டர் குறித்து முழுமையாக கேட்டறிந்துள்ளார் என்றாலும் படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன்னர் முழு ஸ்கிரிப்டையும் கேட்டறிய ஆர்வம் தெரிவித்துள்ளார். அப்படி 'தலைவர் 171' படத்தில் அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டால் கதாபாத்திரத்தை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் என தெரிவித்துள்ளார் லோகேஷ். மேலும் இவர்களின் சந்திப்பு 2024ம் ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



தலைவர் 171 திரைப்படம் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கும் என்றும் அது 2025ல் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இது தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருக்கும். மேலும் படத்தின் தயாரிப்பாளர்கள் இதில் 10க்கும் மேற்பட்ட நடிகர்களை நடிக்க வைக்க உள்ளனர் என கூறப்படுகிறது.