'சுறாமீன் சாப்பிட்ற பிராமின் நான்..' வார்த்தைகளால் விளையாடிய வாலி

மறைந்த புகழ்பெற்ற கவிஞர் வாலி ஒரு முறை எஸ்.ஜே.சூர்யாவுடனான நேர்காணலில் தான் சுறாமீன் சாப்பிடும் பிராமின் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற பாடலாசிரியர் மறைந்த கவிஞர் வாலி. 1958ம் ஆண்டு முதல் பாடல் எழுதி வந்த இவர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் என  அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் ஏற்ற பாடல்களை தந்தவர். எம்.ஜி.ஆரின் பல வெற்றிப் பாடல்களை எழுதிய வாலி புகழ்பெற்ற இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவுடனான நேர்காணலில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 

Continues below advertisement

சுறாமீன் சாப்பிட்ற பிராமின்:

அற்புதமா இருக்கும் எம்.ஜி.ஆரோட டிபன். 6 வகை டிபன் இருக்கும். இடியாப்பம், தேங்காய்பால், தோசை, இட்லி, சாம்பார், முதல் நாள் வச்ச மீன்குழம்பு. நான்தான் மீன் குழம்பு எல்லாம் சாப்பிடுவேனே. சுறாமீன் சாப்பிட்ற பிராமின். டிபன் சாப்பிட்றோமே டேபிள்லதான் அவர் எல்லாத்தையும் சமாதானப்படுத்துவாரு. 

சிச்சுவேஷனே சொல்லாத எம்.ஜி.ஆர்.

டிபன் சாப்பிட ஆரம்பிச்ச உடனே டேபிள்ல எம்.ஜி.ஆர். இப்ப நான் என்னத்துனால பேசுறேன்.. கோவிச்சுட்டு இருக்கேனு நீங்க கேக்கக்கூடாது. எனக்கு பாட்டு எழுதனும். தாழம்பு படம். அதை சாயந்திரம் மகாதேவனோட உக்காந்து எழுதுறீங்க. சரிண்ணு சொன்னேன். என்ன சிச்சுவேஷன்னு கேட்டேன். எனக்கு பாட்டு என்னனு உங்களுக்குத் தெரியாதா? அவர் சிச்சுவேஷனே சொல்ல மாட்டாரு. நான் பாட்ற பாட்டுனுனு சொல்லிடுவாரு. 

அந்த பாட்டுதான் 
எங்கே போய்விடும் காலம். 
அது என்னையும் வாழவைக்கும்..
கொஞ்சம் இதயத்தை திறந்து வைத்தால்..
அது உன்னையும் வாழ வைக்கும்..

இவ்வாறு அவர் கூறியிருப்பார். 

வாலி ஆயிரக்கணக்கில் பாடல்களை எழுதியவர். கண்ணதாசனுக்கு நிகரான ஒரே பாடலாசிரியரும், கவிஞரும் வாலி மட்டுமே ஆவார். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என மறைந்த முதலமைச்சர்களுடன் நெருக்கமான உறவு கொண்டவர்.   மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் என்று பலராலும் பாராட்டப்பட்டவர். சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜெமினி, ரவிச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன், பிரபு, கார்த்திக், சத்யராஜ், அஜித், விஜய், சிம்பு என பல முன்னணி நடிகர்களுக்கும் பாடல் எழுதியவர்.

பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்ற வாலி கடந்த 2013ம் ஆண்டு சென்னையில் உடல்நலக்குறைவால் 81 வயதில் காலமானார். 2014ம் ஆண்டு வெளியான காவியத் தலைவன் படமே அவர் பாடல் எழுதிய கடைசித் திரைப்படம் ஆகும்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola