பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு(Nedumudi Venu), உடல்நல குறைவால் கேரளாவில் காலமானார். அவருக்கு வயது 73. இந்தியன், அந்நியன் உள்பட பல மொழி படங்களில் 500-க்கும் அதிகமான படங்களில் அவர் நடித்துள்ளார். 


ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த அவர், அக்டோபர் 10-ம் தேதி உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 






மலையாளம், தமிழ் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ள அவர் 3 முறை தேசிய விருதுகளையும், 6 முறை கேரள மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். பத்திரிக்கையாளராக தனது பணியைத் தொடங்கிய அவர், நாடகக் கலைஞராக பணியாற்றி பின்பு திரைத் துறையில் தடம் பதித்தார். கடைசியாக ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான ’சர்வம் தாள மையம்’ படத்தில் தமிழில் நடித்திருந்தார்.