மறைந்த பின்னணி பாடகி ஆஷா போஸ்லே ஒரு நேர்காணலில் தனது முதல் திருமண வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்திருப்பார். அதனைப் பற்றிக் காணலாம். 

Continues below advertisement

இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை ஆஷா போஸ்லே பாடியுள்ளார். பாரம்பரிய இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தனது முதல் திருமணத்தில் சந்தித்த சவால்கள் குறித்து ஒரு நேர்காணலில் அவர் பேசியிருந்தார். 

அதாவது, “ஆஷா போஸ்லேவுக்கு 16 வயதாக இருந்தபோது, ​​31 வயதான கண்பத்ராவ் போஸ்லேவை அவர் திருமணம் செய்து கொண்டேன். .தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக இந்த முடிவை எடுத்தேன். என்னை விட 20 வயது மூத்த ஒருவரை நான் மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டேன். அது ஒரு ஒரு காதல் திருமணம். கண்பத்ராவ் போஸ்லே லதா மங்கேஷ்வரின் செயலாளராக இருந்தவர். எங்கள் திருமண முடிவு அக்காவுக்கு பிடிக்கவில்லை. அவர் நீண்ட காலமாக என்னிடம் பேசவில்லை. நான் திருமணம் செய்து சென்ற குடும்பம் மிகவும் பழமைவாதமானது. அவர்களால் ஒரு பாடகியை மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

Continues below advertisement

நான் என் குடும்பத்தினருடனும், குறிப்பாக அக்கா லதா மங்கேஷ்கருடன் நெருங்கிய உறவைப் பேணுவதை என் கணவர் தடுத்தார். என் இரண்டாவது மகன் ஹேமந்தின் பிறப்பிற்குப் பிறகு நிலைமை சீரடைந்ததாகத் தோன்றினாலும் அது நீண்டகாலம் நீடிக்கவில்லை. திருமண வாழ்வில்  நான் துன்புறுத்தலுக்கு ஆளானேன். வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் கணவர் வீட்டில் வசைச்சொற்களும் கொடுமைகளும் இருந்தன. நான் என் தாய், சகோதரிகள் மற்றும் சகோதரரிடம் திரும்பிச் சென்றேன். நான் யாரையும் குறை கூறவில்லை நான் என் கணவரை சந்திக்காமல் இருந்திருந்தால், எனக்கு இந்த மூன்று அற்புதமான குழந்தைகள் கிடைத்திருக்க மாட்டார்கள். அதேசமயம் வாழ்க்கை நன்றாகவே அமைந்திருக்கும் என்றும் நான் உணர்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “முதல் கணவரிடமிருந்து பிரிந்த பிறகு இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனுடன் நட்பு கொண்டேன். நாங்கள் 1980ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டோம். இது எங்கள் இருவருக்கும் இரண்டாவது திருமணமாகும். கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் ஒரு கட்டத்தில் பிரிந்து வாழ்ந்தாலும் பர்மன் இறக்கும் வரை நாங்கள் இருவரும் பரஸ்பர மரியாதையை பேணினோம்" என தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் ஆஷா போஸ்லே மறைவு ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் நிலைகுலைய செய்துள்ளது. சுமார் 70 ஆண்டுகளாக தன் குரலால் ரசிகர்களிடையே உணர்வாக கலந்திருந்த அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.