திரைப்பட இயக்குநர் பாக்யராஜின் இறப்பு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சோக அலையை ஏற்படுத்தியது. பாக்யராஜ் மறைந்து 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் அவரது சுயசரிதை குறித்த தகவலை பாடலாசிரியர் வைரமுத்து பகிர்ந்துள்ளார். இயக்குநர் பாக்யராஜ் இறப்பதற்கு பத்து நாட்கள் முன்பாக தனது சுய சரிதையை அனுப்பி அதற்கு முன்னுரை எழுதும்படி தன்னிடம் கேட்டுக்கொண்டதாக பாடலாசிரியர் வைரமுத்து பகிர்ந்துள்ளார்
1970களில் திரைப்படங்கள் இயக்கத் தொடங்கி 1980 களில் வெற்றிகரமான இயக்குநரா திகழ்ந்தவர் பாக்யராஜ். பாக்யராஜின் படங்கள் குறித்து பேசும்போது சுவாரஸ்யமான திரைக்கதை , அடல்ட் ஹ்யூமர் , போன்ற விஷயங்கள் அவரது படங்களின் சிறப்பம்சங்களாக பேசப்படுகின்றன. இதுமட்டுமில்லாமல் , நடிப்பு , இசை போன்ற துறைகளிலும் தனது திறமைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். பாக்யராஜ் பற்றி இன்னும் கூடுதலாக தெரிந்துகொள்ளும் விதமாக அவரது சுயசரிதை உருவாகியுள்ளது. பாக்யராஜின் சுயசரிதை குறித்து பாடலாசிரியர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாக்யராஜின் சுயசரிதைக்கு முன்னுரை எழுதிய வைரமுத்து
தனது எக்ஸ் பக்கத்தில் வைரமுத்து " 17.06.2026 அன்று ‘படிச்சாப் புடிச்சிர்லாம்’ என்ற தன் சுயசரிதை நூலை எனக்குத் தந்தனுப்பி 'முன்னுரை எழுதிக்கொடுங்கள்'என்று பாசத்தோடு கேட்டார் பாக்யராஜ் ‘கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்’ என்றேன் ‘சரி’ என்றார் . 27.06.2026 அன்று அவர் மறைவுற்றார் என்றசெய்தி என்னை நிலைகுலைய வைத்தது அதன்பிறகு நூலைப் படிக்கப் படிக்க அவர்பட்ட துயரங்களும், ரணங்களும் அவமானங்களும், வறுமையும் என்னை வாட்டி எடுத்தன உணர்ச்சியுள்ள ஒரு முன்னுரை எழுதி முடித்தேன் பிறிதொரு சந்தர்ப்பமாய் இருந்திருந்தால் முன்னுரையை மின்னஞ்சலில் அனுப்பியிருப்பேன் ஆனால், இந்தச் சூழ்நிலையில் நேரில் சென்று அவர்மனைவியிடம் ஒப்படைப்பதே மரியாதை என்று நினைத்தேன் நேற்று மாலை அவர் இல்லம் சென்று திருமதி. பூர்ணிமாவிடம் முன்னுரையை வழங்கினேன்; தம்பி சாந்தனு உடனிருந்தார் எவர் வெளியிட்டாலும் உடனே வெளியிடுங்கள்; உயிர்த்துடிப்புள்ள புத்தகம் இது" என வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
