தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் பிரபல இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றியவர். விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியில் இணையும்போது கே.எஸ்.ரவிக்குமார் சில நிபந்தனைகளுடன் பணியில் இணைந்துள்ளார்.

Continues below advertisement

ரவிக்குமார் போட்ட கண்டிஷன்:

இது குறித்து விக்ரமன் ஒரு முறை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ரவிக்குமார் என்னிடம் சொல்லும்போது என்னிடம் என்ன சொன்னார் என்றால், நான் உங்ககிட்ட வேலை பார்க்கிறேன். ஆனால், டிஸ்கஷனுக்கு வர மாட்டேன், எடிட்டிங் வரமாட்டேன். எனக்கு ஒரு மாதிரி அது இருக்கும் சார். உங்களுக்கு ஓகேவா சார்? என்றார். நானும் ஓகே என்றார்.

ஸ்பாட்டில் அந்த மாதிரி ஒருங்கிணைப்பார். ஒரு ஸ்கெட்யூலுக்கு ப்ரேக்டவுன் போட்டு வந்துவிட்டால் ரவிக்குமார் அந்தளவு சிறப்பாக பார்த்துக் கொள்வார். அதனால், நமக்கு எந்த டென்சனும் இல்லை. இரவில் வீட்டிற்குச் சென்று தூங்கப்போனால், அடுத்த நாள் எல்லாமே ரெடியாக இருக்கும். அந்த மாதிரி பண்ணுவாரு.

Continues below advertisement

சாமர்த்தியசாலி:

கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய ஆள் அவர். அப்போ எல்லாம் போலீஸ் எல்லாம் வைக்கமாட்டோம். பவுன்சர் எல்லாம் வைக்குற கலாச்சாரம் கிடையாது. அதெல்லாம் அவரு மிகப்பெரிய சாமர்த்தியசாலி. பின்னாளில், அவருடைய படங்கள் எல்லாம் பார்க்கும்போது அவர் மிகப்பெரிய திரைக்கதை ஆசிரியராகவும் வந்து, நிறைய வெற்றிகள் கொடுத்து படையப்பா, முத்து, வில்லன், வரலாறு பாருங்கள். எண்ணற்ற படங்கள் சேரன் பாண்டியன், நாட்டாமைனு. திரைக்கதை ஆசிரியராகவும் வெற்றி பெற்று மிகப்பெரிய உயரத்திற்கு போனார். என்னை விட மிகப்பெரிய உயரத்திற்கு போனார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ப்ளாக்பஸ்டர் படங்கள்:

பாரதிராஜா, விக்ரமன், ராமதாஸ், நாகேஷ், ராமராஜன் மற்றும் ரங்கராஜ் ஆகிய இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர், புரியாத புதிர் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். பின்னர், சேரன் பாண்டியன், நாட்டாமை, முத்து, பிஸ்தா, நட்புக்காக, படையப்பா, பாட்டாளி, தெனாலி, சமுத்திரம், பஞ்சதந்திரம், வில்லன், வரலாறு,  தசாவதாரம், ஆதவன் என பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், முரளி, பிரபு, அஜித் என நட்சத்திர பட்டாளங்களை வைத்து படம் இயக்கியுள்ளார். விக்ரமன் புது வசந்தம், கோகுலம், பூவே உனக்காக, சூர்யவம்சம்,  உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், வானத்தைப் போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி என பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.