நடிகைகள் கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன் இணைந்து பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களால் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பாகவே வீட்டைப் புதுப்பித்து, பழைய பொருட்களை எல்லாம் ஒழித்து நேற்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. தொடர்ந்து இன்றைய தினம் பொங்கல் பண்டிகையை தமிழ் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.


அந்த வகையில் திரையுலகப் பிரபலங்களும் உற்சாகத்துடன் தங்கள் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் பகிர்ந்து வருகின்றனர்.




அந்த வகையில் தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமா துறைகளிலும் முன்னணி நாயகிகளாக விளங்கும் கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன் இருவரும் இணைந்து பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள், வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.




முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான த ரூட்டின் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட இருவரும் பொங்கல் வைத்தும் வாழ்த்தியும் மகிழ்ந்தனர்.


 






இந்தப் புகைப்படங்களை கீர்த்தி, பிரியங்கா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.


கீர்த்தி சுரேஷின் நடிப்பில் இந்த ஆண்டு தசரா, சலார், போலா ஷங்கர் ஆகிய படங்களும், நடிகை பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர், ஜெய்லர் படங்களில் நடித்து வருகிறார்.