தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லுஅர்ஜூன். இவர் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் புஷ்பா. கடந்தாண்டு டிசம்பர் 17-ந் தேதி வெளியான புஷ்பா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், படம் நல்ல வசூலைக் குவித்தது. இந்த நிலையில், இந்த புஷ்பா படத்தை நடிகர் கமல்ஹாசன் கண்டுகளித்துள்ளார். புஷ்பா படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்துடன் இணைந்து கமல்ஹாசன் படத்தை பார்த்துள்ளார்.




இதுதொடர்பாக, தேவிஸ்ரீபிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, அன்பிற்குரிய கமல்ஹாசன் சார் எங்களுடன் நேரத்தை செலவிட்டு, எங்களது புஷ்பா படத்தை பார்த்ததற்கு நன்றி. நீங்கள் மிகவும் இனிமையானவர். எங்களது உழைப்பை பற்றி நீங்கள் கூறிய அத்தனை அன்பான வார்த்தைக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.






கமல்ஹாசன் இந்த படத்தை பார்த்ததற்கு படத்தின் நாயகன் அல்லுஅர்ஜூன் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். புஷ்பா படத்தை பார்த்ததற்கு கமல்ஹாசனுக்கு பணிவான நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.






கமல்ஹாசன் இந்த படத்தை தெலுங்கு பதிப்பில் பார்த்துள்ளார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாகம்தான் தற்போது வெளியாகியுள்ளது. புஷ்பா தி ரைஸ் என்ற இந்த படத்தின் முதல் பாகத்தில் புஷ்பராஜ் என்ற செம்மரக் கடத்தல்காரனாக அல்லுஅர்ஜூன் நடித்துள்ளார். கவர்ச்சியான கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ம் சொல்றியா.. ம்ம்ம் சொல்றியா என்ற ஒரு பாடலுக்கு மட்டும் சமந்தா ஆடியிருப்பார். மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்திருப்பார்.




தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையால் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமந்தா ஆடிய பாடல் படத்திற்கு ரசிகர்கள் கூட்டத்தை அதிகரிக்கச் செய்தது. தற்போது படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா தி பால் படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராகி வருகிறது.  



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண