இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞர் கமல்ஹாசன். உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக வித்தகர். இவருக்கும் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ் தாணுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது உண்மையா? என்ன காரணம் என்பதை கீழே காணலாம்.
என்ன பிரச்சினை?
யார் படம் மூலமாக 1985ம் ஆண்டு தயாரிப்பாளராக அறிமுகமான கலைப்புலி எஸ் தாணு, 2001ம் ஆண்டு ஆளவந்தான் என்ற படத்தை தயாரித்தார். கமல்ஹாசனின் திரை வாழ்வில் இந்த படம் தவிர்க்க முடியாத திரைப்படம். இரட்டை வேடத்தில் நாயகனாகவும், வில்லனாகவும் கமல்ஹாசன் இந்த படத்தில் நடித்திருப்பார்.
இந்த படத்தின் தயாரிப்புச் செலவு கமல்ஹாசன் திட்டமிட்டதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்ததும், கமல்ஹாசன் அவரிடம் கூறிய கதைக்கும், படமாக வெளிவந்ததற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருந்ததும் இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய மனக்கசப்பை உண்டாக்கியுள்ளது.
7 கோடிக்கு ஆரம்பித்த 25 கோடி பட்ஜெட்:
2001ம் ஆண்டே 25 கோடி ரூபாய் மதிப்பில் ஆளவந்தான் படம் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தை 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அது 25 கோடி ரூபாயை எட்டவுமே கலைப்புலி எஸ் தாணு கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 2001ம் ஆண்டு தீபாவளிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
பெரிய நஷ்டத்தை உருவாக்கியதாலும், கமல் தனது முயற்சியை இந்த படத்தில் மேற்கொண்டதும் அவருக்கு மனக்கசப்பை உண்டாக்கியது. இந்தியில் அபய் என்ற பெயரில் படத்தை ரிலீஸ் செய்து அங்கும் 2 கோடி மட்டுமே வசூல் செய்தது. அதன்பின்னர், ஓராண்டு எந்த படத்தையும் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவில்லை. மேலும், அந்த படத்தை 20 வருடத்திற்கு பிறகு எடுக்க வேண்டிய படம் என்றும் கலைப்புலி எஸ் தாணுவே கூறியிருப்பார். வருமானம் நன்றாக இருந்தாலும் செலவு அதிகமாக அமைந்தது என்றும் கூறியிருப்பார்.
ரீ ரிலீசிலும் தோல்வி:
அதன்பின்னர், 2003ம் ஆண்டு வெளியான புன்னகை பூவே பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் காக்க காக்க படம் கலைப்புலி தாணுவிற்கு கம்பேக் படமாக அமைந்தது. அதன்பின்னர், அவர் கமல்ஹாசனை வைத்து எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. பின்னர், 2023ம் ஆண்டு மீண்டும் ஆளவந்தானை ரீ ரிலீஸ் செய்தார். ஆனால், அப்போதும் அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
பின்னர், இருவரும் பல வருடங்களுக்கு பிறகு இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசிக்கொண்டனர். பின்னரே இருவரும் சமாதானம் அடைந்தனர்.
