நாடு முழுவதும்  கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகை காஜல் தனது குழந்தையுடன்  ஒரு புகைப்படத்தை பகிர்ந்து  தனது கிருஷ்ண ஜெயந்தி  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் காஜல் அகர்வால். கடந்த ஆண்டு இவர் கெளதம் கிட்சுலு எனும் தொழிலதிபரை மணந்து கொண்டார்.சில மாதங்களுக்கு முன்பு, நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது.






அந்த குழந்தைக்கு நீல் கிட்சுலு என்று பெயர் வைத்தார்.பெரும்பாலான நடிகைகள், திருமணத்திற்கு பிறகு நடிப்பது அரிது. சில காரணங்களால் அவர்கள் நடிப்பதை தவிர்த்து விடுவர். அப்படியே அவர்கள் ரீ-எண்ட்ரி கொடுக்க நினைத்தாலும் மார்கெட்டில்  சூழ்நிலையே மாறி இருக்கும். சிலர் சின்னத்திரையிலும் களம் இறங்குவதும் உண்டு.


அதுபோல், நடிகை காஜல் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்று பேசப்பட்டது. ஆனால், கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் இவர் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வந்து காஜலின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. காஜலுக்கு கல்யாணம் என்ற செய்தியை கேட்டு சோர்ந்து போன ரசிகர்கள் , இச்செய்தியைகேட்டு உற்சாகம் ஆகிவிட்டனர்.






தற்போது நடிகை காஜல் அவரின் இன்ஸ்டா பக்கத்தில்அவரின் குழந்தையை மடியில் வைத்து  கொஞ்சுவது போல் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். “ நீல் கிட்சுலு பிறந்து 4 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. அனைவருக்கும்  கிருஷ்ண ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள்” என்று  படத்தின் கேப்ஷனில் பதிவிட்டுள்ளார்