தமிழ் சினிமாவில் 90களின் இறுதி காலகட்டத்தில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. முதல் படமே அஜித்தின் வாலி படத்தில் சோனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிறகு சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார் ஹீரோயினானாக நடித்தார். இவர் கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 


இதனையடுத்து சூர்யாவைக் காதலித்து வந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குத் திருமணம் அவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.


தமிழ் சினிமாவில் மிகவும் ஃபேவரைட் ஜோடி என்றால் அது சூர்யா- ஜோதிகா  தான். இவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதல், மரியாதை, பாசம், குழந்தை தன்மையை அனைவரும் ரசிப்பார்கள்.  


குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சூர்யா போன்ற கணவர் வேண்டும் என்று பல இளம் பெண்கள்  மனதாக விரும்பினர். ஏன் இன்று கூட சில பெண்களிடம் உங்களுக்கு எப்படி கணவர் வேண்டும் என்று கேட்டால் முதலில் அவர்கள் சொல்வது நடிகர் சூர்யா போல் இருக்க வேண்டும் என்று தான்.


திருமணமாகி பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நடிகை ஜோதிகா 36 வயதினிலே திரைப்படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரீ கொடுத்தார். இதனையடுத்து ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் என தொடர்ச்சியாகக் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.  


திரைப்படங்களில் மட்டும் பார்க்க வந்த இவர் தற்போது சமூக வலைத்தளங்களிலும் நுழைந்துள்ளார். நடிகை ஜோதிகா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். அவரை வரவேற்கும் விதமாக ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா அவரை வரவேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.






ஜோதிகா சுதந்திர தினத்தன்று இமயமலையில் சுமார் 70 கிலோ மீட்டர்  டிரெக்கிங் சென்றார். அப்போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் பதிவாக வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை தற்போது வரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்து இருக்கின்றனர்.


நடிகை ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் உடன்பிறப்பே.   இப்படம் வரும் அக்டோபர் மாதம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.