கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம், நடிகர் ஜீவாவுக்கு ஒரு சிறப்பான கம்பேக் படமாக அமைந்தது. திரையரங்கைத் தொடர்ந்து இப்படம் தற்பொது ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் படத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணுங்கடா' வசனம் நீக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கண்ணன் ரவி குழுமத்தின் தயாரிப்பில், தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இந்த படத்தை இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கியுள்ளார். ஜீவா கதையின் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய ஃபீல்-குட் என்டர்டெய்னராக உருவான இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பொங்கலுக்கு வெளியான பராசக்தி திரைப்படம் ரசிகர்களை கவராத நிலையில் தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு கவனம் பெறுகியது. எளிய கிராமத்து பின்னணியில் நகைச்சுவை கலந்து உருவான இப்படம் ரசிகர்களுக்கு தேவையான ஒரு இளைப்பாறலாக அமைந்தது. இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது 

Continues below advertisement

சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம் 

தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தில் ஒரு வசனம் பெரியளவில் எதிர்ப்புகளை சந்தித்தது. விஜயின் கரூர் அரசியல் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகமான நிகழ்வாக அனைவரது மனதையும் உலுக்கியது. சின்ன குழந்தைகள் உயிரிழந்ததைப் பார்த்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அழுதது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது. அப்போது அவர் கூறிய 'கண்டிஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடா ' என்கிற வரியை இப்படத்தில் நகைச்சுவையாக ஜீவா பேசியிருந்தார். இவ்வளவு பெரிய துயர நிகழ்வுடன் தொடர்புடைய விஷயத்தை வைத்து நகைச்சுவை செய்ததை கண்டித்து பலரும் விமர்சித்தார்கள். ஆனால் இந்த வசனம் நகைச்சுவை உணர்வுக்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாகவும் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு வைக்கவில்லை என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.  தற்போது ஓடிடியில் படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தில் இருந்து சர்ச்சைகுரிய இந்த வசனம் மியூட் செய்யப்பட்டுள்ளது.