பிரபலமான தொலைக்காட்சிகளான சன் டிவி, விஜய் டிவி போன்ற சேனல்களில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்து வந்தவர் ஜேம்ஸ் வசந்தன். இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஜேம்ஸ் வசந்தன், சசிகுமார் இயக்கத்தில் வெளியான 'சுப்ரமணியபுரம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானர். அப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்களாக அனைவரையும் முமுணுக்கவைக்கும் பாடல்களாக அமைந்தன. அதிலும் கண்கள் இரண்டால் பாடல் இன்றும் அனைவரின் ஃபேவரட் பாடலாக இருந்து வருகிறது.
இளையராஜா டூ அனிருத் : ஜேம்ஸ் வசந்தன் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி அது குறித்த விவாதங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்வதை வழக்கமாக கொண்டவர். அதிலும் குறிப்பாக இளையராஜாவை அவ்வப்போது டார்கெட் செய்து ஏதாவது ஒரு குறை சொல்லி கொண்டே இருப்பார். இளையராஜாவை தொடர்ந்து தற்போது அவர் குறை கூறி இருப்பது அனிருத்தை. இமானை பாராட்டிய ஜேம்ஸ் : பேட்டி ஒன்றில் பேசிய ஜேம்ஸ் வசந்தன் இமான் மற்றும் அனிருத் இசை பற்றி விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். அன்றைய மெலடி ஹிட்ஸ் போல இந்த காலத்தில் எங்கு பாடல்கள் வருகின்றன. இமான் ஒரு நல்ல இசையமைப்பாளர். துள்ளலான பாடல்களை கொடுத்தாலும் பல ஹிட்டான மெலடி பாடல்களையும் இன்றைய காலகட்டத்தில் கொடுத்து வரும் ஒரே இசையமைப்பாளர் அவர் மட்டுமே. அன்றைய இசையை போல இனிமையான டூயட், தனி பாடல்களை இந்த தலைமுறைக்கு கொடுக்கும் ஒரே இசையமைப்பாளராக இமான் இருந்து வருகிறார் என பாராட்டி தள்ளினார் ஜேம்ஸ் வசந்தன். ராக் மட்டும் போதாது: