நடிகை பார்வதி நாயர் சரா கபி மெரி நாசர் என்ற இந்தி பாடலை தனது சொந்த குரலில் பாடி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ”எப்படி இவ்வளவு அழகான பாடலை உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. இந்த பாடலை நான் நாள் முழுவதும் பாடிக்கொண்டே இருக்கின்றேன். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது”என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் மேடம் உங்களின் குரல் மிகவும் அழகாக இருக்கின்றது என்று பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகிறது. 






நடிகை பார்வதி மலையாளம் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் பூ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.  இப்படத்திற்கு தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். அதனை அடுத்து மரியான் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பெங்களூர் டேஸ் திரைப்படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் இவர் நடித்துள்ளார்.


இந்த படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தங்கலான்' படப்பிடிப்பில் தீவிரமாக பங்கேற்று நடித்து வந்த பார்வதி தான் நடிக்க வேண்டிய காட்சிகளை முழுமையாக நடித்து முடித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் என் நண்பர் எனக்கு ஒரு வாசகத்தை அனுப்பி இருந்தார் தங்கலான் படத்தில் எனக்கு கிடைத்த சிறப்பான அனுபவத்தைக் கூற இதைவிட ஒரு சிறந்த வாசகம் கிடைக்காது.


காதல், பணம், புகழ் இதை தவிர எனக்கு உண்மையை தாருங்கள் தங்காலன் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்காக நான் சென்ற இடங்கள், நான் தேர்தெடுத்த விஷயங்கள், அனைத்தும்  எனக்குள் நான் எழுப்பியிருந்த சுவர், முகத்திரைகளை சுக்குநூறாக உடைத்து, உண்மையை மட்டுமே எஞ்சவைத்தது, இப்படம் எனக்கு மிகவும் முக்கியமான திருப்பத்தை கொடுத்துள்ளது" என பதிவிட்டிருந்தார்.


மேலும் படிக்க 


Maamannan Review: மாமன்னன்.. இவன் மக்களின் மன்னன்...சம்பவம் செய்த மாரி செல்வராஜ்.. முழு விமர்சனம் இதோ...!


New Chief Secretary: புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்.. தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!