ஹிந்தி திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கோலிவுட்டின் முன்னனி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர், மாப்பிள்ளை படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகிற்குள் என்ட்ரியானார். முதல் படத்திலேயே முன்னனி ஹீரோவுடன் நடித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. கடந்த 11 வருடங்களி்ல் ஜெயம் ரவி, சிவ கார்த்திகேயன், சிம்பு, உதயநிதி ஸ்டாலின் என பலருடன் ஜோடி சேர்ந்துவிட்டார். 


கார்டியன்-ஹன்சிகா!


கோலிவுட் திரையுலகிள், பேய் படங்களுக்கும் த்ரில்லர் படங்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் எப்போதுமே உண்டு. இதனைப் புரிந்து கொண்ட நடிகை ஹன்சிகா, மஹா என்ற படத்தில் ஒன் வுமென் ஹீரோயின் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், இவரது நடிப்பினை பலரும் பாராட்டினர். மஹா படத்தையடுத்து, ஹன்சிகா கார்டியன் என்ற படத்தில் நடிக்கிறார். 


தமிழில் கே எஸ் ரவிகுமார், லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய சபரி, சரவணன் இப்படத்தை இயக்குகின்றனர். வாலு, ஸ்கேட்ச், சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை வழங்குகிறார். 






கதை என்ன?


கார்டியன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகை ஹன்சிகாவும் கார்டியனின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முகத்தில் கோடு, வாயில் ரத்தம் வழிய போஸ் கொடுக்கும் ஹன்சிகாவின் நடிப்பை படத்தில் பார்க்க பலரும் ஆர்வமுடன் உள்ளதாக பலரும் கமெண்டுகளில்  தெரிவித்து வருகின்றனர். அரண்மனை படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் ஏற்கனேவ நடிகை ஹன்சிகா பேயாக மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


திருமண வதந்தி:


ஹன்சிகாவிற்கு டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் உள்ள முண்டாடோ கோட்டை,அரண்மனையில் திருமணம் நடைபெறவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு  தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இத்தகவலை ஹன்சிகா தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. “ஹன்சிகாவிற்கு திருமணம்” என தகவல் பரவுவது இது முதல் முறையல்ல. வாலு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது தமிழ் நடிகர் சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்தனர். அப்போதும் கூட சிம்புவும் ஹன்சிகாவும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் பரவியது. ஆனால், சிறிது நாட்களுக்குள்ளாகவே அவர்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த திருமணப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.