பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து இராண்டாவது பாடலான   ‘சோழா சோழா’ பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 


 


                                               


 


முன்னதாக படத்தில் இருந்து  ‘பொன்னி நதி’  பாடல் வெளியிடப்பட்டு இருந்தது. கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இந்தப்பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்த பாடலான ‘ சோழா சோழா’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப்பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் இசை மற்றும் ட்ரெய்லரானது சென்னையில் செப் 6ம் தேதியும், ஐதராபாத்தில் 8ம் தேதியும் நடைபெறுகிறது. பாடல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 


’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


 






ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னதாக இப்படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கடந்த ஜூலை 8 ஆம் தேதி வெளியிட்டது.


 


                                                     


தமிழ்நாடு தாண்டி பிறமொழி ரசிகர்களிடையும் இந்த டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜூலை மாதம் தொடங்கி பொன்னியின் செல்வன் பட அப்டேட்களை தொடர்ந்து வழங்கி படக்குழு மகிழ்வித்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி வெளியானது. இது தொடர்பான நிகழ்ச்சி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்தது. இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி, ஜெயராம், ஜெயம்ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அதனைத்தொடர்ந்து அதன் மேக்கிங் வீடியோவும் வெளியிடப்பட்டது.


 


                                                     


கடந்த ஜூலை 16 ஆம் தேதி தமிழர்களின் பொற்கால வரலாற்றை வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், வல்லுநர்கள் சொல்வது போல ஒரு வீடியோ வெளியானது. இதனையடுத்து சோழர் காலத்தைப் பற்றி பல தகவல்கள் அடங்கிய வீடியோவும், அருண்மொழிவர்மன் எப்படி ராஜராஜ சோழனாக மாறினார் என்பது தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோவும்  முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றன.


2 பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம்  டீசர் வெளியிட்டு விழாவும் அன்றைய தினம் பிரமாண்டமாக சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இந்நாவலை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன் என்றும், இதனை படமாக்க  3 தடவை முயன்றுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்