ஷாருக்கான்


ஃபாஜி எனும் தொலைக்காட்சி சீரியலில் தன் திரை வாழ்வுக்கு அடிக்கல் நாட்டினார். அவரது முதல் படம் தீவானா. பாலிவுட் சூப்பர் ஸ்டாராகவும், உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டும் இருக்கும் ஷாருக்கான் இன்று வரை தொலைக்காட்சியிலிருந்து சினிமாவுக்கு பயணிக்கும் ஒவ்வொரு இந்திய நடிகர்களுக்கும் உத்வேகமாக விளங்குகிறார்.


மாதவன்




ஜீ தொலைக்காட்சியின் இந்தி சீரியல் மூலம் இந்தி சீரியல் ரசிகர்களை ஈர்த்த மாதவன், மணிரத்னத்தின் கண்ணில்பட்டு அலைபாயுதே மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வென்று, இன்று வரை ஆட்சி செய்து வருகிறார்.


சிவகார்த்திகேயன்


’கலக்கப்போவது யாரு?’டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் மக்களின் கிச்சு கிச்சு மூட்டி பெரும் பிரபலமடைந்த சிவகார்த்திகேயன், பாண்டிராஜின் மெரினா படம் மூலம் கோலிவுட் பயணத்தை தொடங்கினார். இன்று கோலிவுட்டின் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனான கோலோச்சி வருகிறார்.


பிரியா பவானி சங்கர்




இன்றைய தேதிக்கு கோலிவுட்டில் அதிக படங்கள் கைவசம் வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர், செய்தி வாசிப்பாளர் டூ டிவி சீரியல் நாயகி டூ ஹீரோயின். இவரது முதல் படம் மேயாத மான். செய்தி வாசிப்பாளராக இருந்த போதாகட்டும் இன்று நாயகியாக கலக்கிவரும்போதாகட்டும் எதை செய்தாலும் சிறப்பாக தன் தனித்துவம் மாறாமல் செய்யும் பிரியாவுக்கு ரெட் கார்ப்பெட் விரித்து ரசிகர்கள் பொக்கே கொடுத்து வருகின்றனர்.


சந்தானம்


'லொல்லு சபா’ சந்தானம் என இன்றளவும் மகிழ்ச்சியோடு நினைவுகூறப்படும் சந்தானம், நடிகர் சிம்புவின் மன்மதன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அன்று முதல் கோலிவுட்டில் ரீப்ளேஸ்மெண்ட் இல்லாமல் தன் கவுண்டர்களால் தொடர்ந்து மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறார்.


யாஷ்




கன்னட டிவி சீரியல்களில் நடித்து வந்த யாஷ், கேஜிஎஃப் படத்துக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டாராக, இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவையே தனக்கு சலாம் சொல்ல வைத்துள்ள ராக்கி பாயை இன்னும் அதிகம் கொண்டாட ரசிகர்கள் வழி மேல் விழி வைத்துக் காத்துள்ளனர்.


வாணி போஜன்




சன், ஜெயா, ஜீ தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல்கள் மூலம் கவனம் ஈர்த்த வாணி போஜன், ’ஓ மை கடவுளே’ படம் மூலம் கோலிவுட் எண்ட்ரீ கொடுத்தார். சமூக வலைதளங்களில் தனக்கென பெரும் ஆர்மியை உருவாக்கி வைத்திருக்கும் வாணியை கோலிவுட் ரசிகர்கள் அடுத்தடுத்த படங்களில் பார்க்க ஆவலாகக் காத்துள்ளனர்.  


ஆயுஷ்மான் குரானா


தமிழில் சிவகார்த்திகேயன் போல் இந்தியில் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமடைந்த ஆயுஷ்மான் குரானா, இன்று இந்தி சினிமாவில் கதையம்சம் கொண்ட படங்களை எடுத்து நடிப்பதில் முதன்மையானவர். தாராள பிரபு ,நெஞ்சுக்கு நீதி தொடங்கி வரவிருக்கும் வீட்ல விசேஷம், அந்தகன் படங்கள் வரை இந்தி சினிமாவில் ஆயுஷ்மான் நடித்த படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. கோலிவுட்டில் நேரடியாக நடிக்காமலேயே தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ள ஆயுஷ்மானுக்கு பூச்செண்டு!


சுஷாந்த் சிங் ராஜ்புத்




’பவித்ர ரிஷ்தா’ எனும் இந்தி சீரியல் மூலம் பாலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்த சுஷாந்த், தோனியாக நடித்து உலக மக்களின் மனங்களை வென்றார். இறப்புக்குப் பின்னும் சுஷாந்த் தொடர்ந்து ஏராளமான மக்களால் அனுதினமும் நேசிக்கப்பட்டு வருவதே அவரது நடிப்புத் திறமைக்கான மணிமகுடம்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண