திரைப்படங்கள் குறித்தும், சொந்த வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை அவர் ஷேர் செய்துள்ளார். குறிப்பாக தற்போது தமிழில் நடித்து வெளியாக தயாராக உள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் குறித்து அதிகம் பேசியுள்ளார். அதில், நயன் தாரா நட்பு குறித்து பேசிய சமந்தா, நயன் ஒரு தனித்துவமான ஆள். காத்து வாக்குல படத்தை காண ஆர்வமாக இருக்கிறேன். சிறப்பாக அவர் பணியாற்றியுள்ளார் என்றார். மேலும் சில கேள்வி பதில்களை பார்க்கலாம்






விக்னேஷ் சிவன் பற்றிய கேள்விக்கு ''விக்னேஷ் ஒரு அழகான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். அவர் மனதையும் ஆன்மாவையும் இந்தப்படத்தில் போட்டுள்ளார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடையும். காண, ஆவலாக காத்திருக்கிறேன்'' என்றார்


விஜய் சேதுபதி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கையில் ஹார்ட்டின் விட்டு தன் அன்பை பகிர்ந்துள்ளார் சமந்தா. அதேபோல தான் பார்த்த முதல் திரைப்படம் ஜுராசிக் பார்க் என்றும், தன்னுடைய முதல் சம்பளம் ரூ.500 என்றும் தெரிவித்தார். பள்ளியில் படிக்கும் போதே பார்ட் டைம் வேலையாக ஹோட்டலில் நடக்கும் விழாக்களை தொகுத்து வழங்கினேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 






அதே போல் இனி டாட்டூ என்பதே வாழ்க்கையில் இல்லை என்றும் அந்த ஐடியாவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இளம் பெண்களுக்கு சமந்தா சொல்ல விரும்புவது என்ன என்ற கேள்விக்கு, ''உங்களை நீங்களே சந்தேகம் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் அந்த சூழ்நிலையை உருவாக்கவும் அனுமதிக்காதீர்கள். உங்கள் கனவைத் துரத்துங்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண