சூர்யாவின் கருப்பு திரைப்படம் வரும் மே 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இரண்டாவது பாடல் நேற்று சர்ப்ரைஸாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் என்ன ரியாக்‌ஷ் செய்துள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம்

Continues below advertisement

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் சூர்யாவின் 45 ஆவது படமாகும். ட்ரீம் வாரியர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார் . சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இருந்து பின் சாய் அப்யங்கர் படத்தில் இணைந்தார். கருப்பு படத்தின் முதல் பாடல் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சாய் அப்யங்கரின் இசையை பலரும் ட்ரோல் செய்து வந்தனர். இதனிடையில் வெளியான டியூட் திரைப்படத்தில் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தார் சாய் அப்யங்கர். ஆனால் கருப்பு படத்தைப் பொறுத்தவரை அவரது இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் 

சிம்பு குரலில் வெளியான கருப்பு பாடல் 

கருப்பு படத்தின் இரண்டாவது பாடல் நேற்று முன்னறிவிப்பின்றி வெளியானது. 'நாங்க நாலு பேரு' என்கிற இந்த பாடலை சிம்பு மற்றும் அசல் கோலார் இணைந்து பாடியுள்ளார்கள். முதல்முறையாக படத்தில் ஆர் ஜெ பாலாஜியின் கதாபாத்திரம் 'பேபி கண்ணன்' இந்த படத்தில் அறிமுகபடுத்தியுள்ளார்கள். இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் தங்களது அதிருப்தியை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி வருகிறார்கள். 

Continues below advertisement

சாய் அப்யங்கர் கடந்த ஆண்டு இசையமைத்த டியூட் திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகின. அதேபோல் அண்மையில் வெளியான பவழ மல்லி பாடலும் படு வைரலாகியுள்ளது. ஆனால் சூர்யா படத்திற்கு மட்டும் சுமாரான பாடலை சாய் வழங்கியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். டியூட் படத்தின் ஊறும் பிளட் பாடல் வெளியானபோதும் அப்பாடல் பரவலாக ட்ரோல் செய்யப்பட்டது. பின்  ரசிகர்கள் தங்களது கருத்துகளை மாற்றிக்கொண்டார்கள். அதே போல் இந்த பாடலும் அடுத்தடுத்த நாட்களில் பாசிட்டிவாக பேசப்படும் என சூர்யா ரசிகர்கள் நம்பி வருகிறார்கள்