நடிகர் வைபவ் நடித்திருக்கும் ஆர் கே நகர் திரைப்படத்தை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இன்று ப்ரீமியர் செய்ய இருக்கிறது. 


குற்றங்கள் தினசரி நிகழ்வுகளாக நடைபெறும் நிழல் உலகத்தை பின்புலமாகக் கொண்டு ஆர் கே நகர் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 


இயக்குநர் சரவணராஜன் இயக்கத்தில் கடந்த 2019 – ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் வைபவ் மற்றும் நடிகை சனா அல்தாஃப் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தனர். நடிகை அஞ்சனா கீர்த்தி, நடிகர் சம்பத் ராஜ், நடிகர் இனிகோ பிரபாகரன் ஆகியோர் துணைக்கதாபாத்திரங்களில் நடித்தனர். 




 


கதையின் கரு 


பணக்காரர்கள் இன்னும் பெரிய பணக்காரர்களாக ஆகின்றனர்.  ஆனால், ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே இருக்கின்றனர் என்று நம்புகின்ற சங்கருக்கு (வைபவ்) பணக்காரர்கள் மீது மதிப்போ, மரியாதையோ இல்லை.  எனினும், சில ரௌடிகளை துரத்திக்கொண்டு சங்கர் ஓடுவதை ரஞ்சனி (நடிகை சனா அல்டாஃப்) பார்க்கும்போது அதிர்ஷ்ட தேவதையின் பார்வை அவன் மீது விழுகிறது.  


 




ரௌடிகளையும், குண்டர்களையும் வெறுக்கின்ற தனது அதே கண்ணோட்டமே சங்கரிடமும் இருக்கிறது என்று நினைக்கின்ற ரஞ்சனிக்கு சங்கர் மீது மதிப்பு வருகிறது. அவர்களது உறவு வளர ஆரம்பிக்க, விஸ்வநாதன் என்ற லோட்டை (சம்பத் ராஜ்) மற்றும் மனோஜ் என்ற மன்னு (இனிகோ பிரபாகரன்) என்ற இரு எதிரிகள் மோதலில் ஈடுபடுகின்றனர்.  இவர்களது மோதலின் காரணமாக மிகப்பிரபலமான ஒரு நபர் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை குற்றச்சாட்டு சங்கர் மீது விழுகிறது. குற்றமிழைக்காத நபர் என்று தன்னை சங்கர் எப்படி நிரூபிக்க போராடுகிறார் என்பதே மீதி கதை..


வைபவ் பேட்டி


இத்திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் வைபவ் இதுபற்றி கூறியதாவது: “சிறப்பான கதைக்களத்தையும், அதிரடி திருப்பங்களையும் கொண்ட இத்திரைப்படம், தமிழ்நாட்டின் பிரபல சேனலான கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பப்படும் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. அதிரடி சண்டை நிகழ்ச்சிகளுக்கு பொருந்துகின்றவாறு நகைச்சுவை காட்சிகளையும் சிறப்பாக ஆக்குவதற்கு இதில் நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம்.  


ஒரே திரைப்படத்தில் த்ரில்லர், காமெடி மற்றும் ரொமான்ஸ் என்ற மூன்று பிரிவுகளில் நடிக்கும் அரிதான வாய்ப்பு இத்திரைப்படத்தில் எனக்கு இக்கதாபாத்திரத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. பார்வையாளர்களும் இத்திரைப்படத்தை ரசித்து அனுபவிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்; நிச்சயம் பார்க்க வேண்டிய படமாக இது இருக்கும்.” என்றார். இந்தப்படம் இன்று மதியம் 2.00 மணிக்கு  ஒளிப்பரப்பபடுகிறது. 


இயக்குநர் பேட்டி 


இத்திரைப்படத்தின் இயக்குனர் திரு. சரவண ராஜன் இதுகுறித்து பேசுகையில், “கலர்ஸ் தமிழ் போன்ற மிகப்பிரபலமான சேனலில் எனது திரைப்படம் ஒளிபரப்பப்படுவது உள்ளபடியே எனக்கு பெருமகிழ்ச்சி.  இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களை சென்றடைவதோடு, அவர்களுக்குப் பிடித்த திரைக்காவியமாக இருக்குமென்று நான் நம்புகிறேன்.” என்றார்.