யார் இந்த இயக்குநர் எஸ் எஸ் ஸ்டான்லி? ரூ.1000 கோடி வசூல் செய்த படத்தில் நடித்துள்ளாரா?

இயக்குநரும், நடிகருமான எஸ் எஸ் ஸ்டான்லி சிறுநீரக பிரச்சனை காரணமாக உயிரிழந்த நிலையில் அவர் யார்? அவர் இயக்கிய படங்கள் மற்றும் நடித்த படங்கள் குறித்து பார்க்கலாம்.

Continues below advertisement

யார் இந்த இயக்குநர் எஸ் எஸ் ஸ்டான்லி:

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணார் பகுதியில் பிறந்தவர் தான் இயக்குநர் எஸ் எஸ் ஸ்டான்லி. இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்னதாக இயக்குநர் மகேந்திரன் மற்றும் சசி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். 12 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இயக்கிய முதல் படம் தான் 'ஏப்ரல் மாதத்தில்'.

Continues below advertisement

ஏப்ரல் மாதத்தில்:

2002 ஆம் ஆண்டு திரைக்கு வந்த 'ஏப்ரல் மாதத்தில்' படத்தில் ஸ்ரீகாந்த், சினேகா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்புக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்களை இயக்கினார்.


நடிகர் எஸ் எஸ் ஸ்டான்லி:

இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார் எஸ் எஸ் ஸ்டான்லி. அப்படி அவர் என்னென்ன படத்தில் நடித்தார் என்று பார்த்தல், அவர் சத்யராஜ் நடிப்பில் வந்த பெரியார் படத்தில் தான் ஒரு நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர், ராவணன், நினைத்தது யாரோ, ஆண்டவன் கட்டளை, கடுகு, ஆண் தேவதை, சர்கார், பொம்மை நாயகி, மகாராஜா என்று பல படங்களில் நடித்துள்ளார்.

ஆதாம் ஆப்பிள்:

கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ ஆர் முருகதாஸின் புரோடக்‌ஷன் ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆதாம் ஆப்பிள் என்ற படத்தை இயக்க இருந்தார். இந்தப் படத்தில் வைபவ் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் முன்னணி ரோலில் நடிக்க இருந்தனர். ஆனால், இந்தப் படம் எடுக்கப்படவில்லை. கிடப்பில் போடப்பட்டது.


சிறுநீரக பிரச்சனை:

கடந்த சில மாதங்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ஸ்டான்லி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருடைய சிகிச்சைக்கு ரூ.25 லட்சம் பணம் தேவைப்பட்ட நிலையில், அதை நடிகர் தனுஷ் தான் செய்தற். இந்த நிலையில் தான் இன்று, சிகிச்சை பலனின்றி ஸ்டான்லி உயிரிழந்துள்ளார். எஸ் எஸ் ஸ்டான்லி உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பிரபலங்கள் இவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Continues below advertisement