கோல்வுட் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஷங்கரின் மகன் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. எச் வினோத் , ஜேசன் சஞ்சய் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள்.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் பல்வேறு மாபெரும் வசூல் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஷங்கர். கடந்த இரு ஆண்டுகளில் இவர் இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அடுத்தபடியாக வரலாற்று நாவலான வேள்பாரி நாவலை பிரம்மாண்ட திரைப்படமாக்க உருவாக்க இருக்கிறார். அதற்கு முன்பாக ஒரு சின்ன நடிகர்களை வைத்து ஷங்கர் விறுவிறுப்பான ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நாயகனாக அறிமுகமாகும் ஷங்கர் மகன் அர்ஜித் 

ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் கடந்த 2022 ஆம் ஆண்டு விருமன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அவரைத் தொடர்ந்து ஷங்கரின் மகன் அர்ஜித் அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாக இருக்கிறார்.  . இவர் அமெரிக்காவில் திரைப்படத் தயாரிப்பு மற்றும் இயக்கம் குறித்துப் பயின்றதோடு, 'நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா'வில் (NSD) முறையான நடிப்புப் பயிற்சியும் பெற்றுள்ளார். இப்படத்தை 'பேஷன் ஸ்டுடியோஸ்' (Passion Studios) தயாரிக்கிறது; 'குட் ஷோ புரொடக்ஷன்ஸ்' (Good Show Productions) நிறுவனம் இதனை 'ஃபர்ஸ்ட்-காப்பி' (first-copy) அடிப்படையில் தயாரிக்கிறது. இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அசோக் இப்படத்தை இயக்குகிறார். இவர் முன்னதாக, சிவகார்த்திகேயன் நடிப்பில் 'சிங்கப்பாதை' என்ற கவர்சியல் திரைப்படத்தை இயக்கவிருந்து பின் அப்படம் கைவிடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன்  தொடங்குகியது. படக்குழுவினர் விரைவாகப் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்; அதன் பிறகு, திரையரங்குகளில் வெளியிடுவதற்கான பொருத்தமான தேதி இறுதி செய்யப்படும்.

Continues below advertisement

சிறப்பு விருந்தினராக வந்த ஜேசன் சஞ்சய்

முதல்வர் விஜயின் மகன்  ஜேசன் சஞ்சய், இயக்குநர் ஷங்கர் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் ஆகியோர் இப்படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

ஜேசன் சஞ்சய் தற்போது சந்தீப் கிஷன் நடித்துள்ள சிக்மா திரைப்படத்தை இயக்கியுள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 31 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.