Selvarahavan: பசி கொடுமை... பொய் சொல்லி பக்கத்துக்கு வீட்டில் அம்மா இதை வாங்குவாங்க! செல்வராகவன் பகிர்ந்த வேதனை தகவல்!

இயக்குநரும், நடிகருமான செல்வராகன் தான், சிறு வயதில் பட்ட கஷ்டங்கள் குறித்து யூடியூப் சேனல் ஒன்றிற்கு வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார்.

Continues below advertisement

காதல் கொண்டேன் படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். இந்தப் படத்திற்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி படத்தை இயக்கினார். பிறகு புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என்ஜிகே, நானே வருவேன் என்று பல படங்களை இயக்கினார்.

Continues below advertisement

இதில் பல படங்களில் இவரின் தம்பி தனுஷை தான் ஹீரோவாக நடித்துள்ளார். ஒரு இயக்குநராக மட்டுமின்றி இரண்டாம் உலகம், பீஸ்ட், பகாசூரன், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல் என்று பல படங்களில் நடித்துள்ளார். சினிமா பின்னணியை வைத்து கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த செல்வராகன் தான் சிறு வயதில் அனுபவித்த கஷ்டங்களை யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.


பிழைப்பு தேடி சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வர வேண்டிய சூழல். அந்தளவிற்கு வறுமை வாட்டியது. முதலில் நானும், சகோதரியும் தான். அப்போது தனுஷ் பிறக்கவே இல்லை. எங்களுக்கு சாப்பிட சாப்பாடு இருக்கது. பக்கத்து வீட்டில் கஞ்சி வாங்கி அதனை கொடுப்பார்கள். அதுவும் பொய் சொல்லி தான் கேட்பார்கள். 

எப்படி என்றால், கணவர் அலுவலக வேலைக்கு செல்கிறார். அவரது உடைக்கு கஞ்சி போட்டு அயர்ன் பண்ண வேண்டும். ஆதலால் கொஞ்சம் கஞ்சி இருந்தால் கொடுங்கள் என்று கேட்டு வாங்குவார். அந்த கஞ்சி தான் எங்களுக்கு சாப்பாடு. ஒவ்வொரு நாளும் நாங்கள் கஷ்டங்களை அனுபவித்தோம். நான் ஸ்கூலுக்கு போய்விடுவேன். அப்பாவும் வேலைக்கு சென்றுவிடுவார். அம்மாவும், சகோதரியும் தான் வீட்டில் இருப்பார்கள். கடைசியில் எங்களது வீட்டில் 4 குழந்தைகள் ஆனார்கள். 


என்னுடைய அப்பா ஒவ்வொரு நாளும் பல நெருக்கடிகளை சந்தித்தார். உண்மையிலேயே அவர் மிகவும் பாவம். மாசம் 500 ரூபா தான் அவருக்கு சம்பளம் கிடைக்கும். அத வச்சு அந்த ஒரு மாதம் முழுவதும் 5 வயிறு சாப்பிட வேண்டும். இதில், தீபாவளி, பொங்கல் என்றால் புது டிரஸ் வேறு வாங்கணும். அப்படி என்றால் எந்தளவிற்கு கஷ்டம் இருந்திருக்கும் என்று பாருங்கள். ஆனால், அதையும் மீறி எங்களுக்கு புது டிரஸ் கிடைத்துவிடும்.

இதில், தனுஷ் மட்டுமே கஷ்டத்தை பார்க்கவில்லை. அவர் பிறக்கும் போது குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது. அப்பா இயக்குநராகவும் மாறிவிட்டார். அதன் பிறகு எங்களுக்கு இருந்த எல்லா கஷ்டமும் மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola