தனுஷின் 55 ஆவது படமாக உருவாகிறது ஓம். அமரன் படத்தைத் தொடர்ந்துர் ராஜ்குமார் பெரியராமி மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை இயக்குகிறார். மம்மூட்டி , சாய் பல்லவி , ஶ்ரீலீலா ஆகியோர் படத்தில் நடிக்கிறார்கள். சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். சிவ பக்தரான தனுஷ் தனது இஷ்ட தெய்வத்தையே இந்த படத்தின் டைட்டிலாக வைத்துள்ளார் . ஓம் பட டைட்டில் காரணம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கமளித்துள்ளார் 

Continues below advertisement

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியபோது

“இந்த திரைப்படம் ‘ஓம்’ என்ற தலைப்புடன் தொடங்கியுள்ளது. தலைப்பு தேர்விலிருந்து நடிகர், நடிகைகள் தேர்வு வரை, தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தைச் சுற்றி நடந்த ஒவ்வொரு விஷயத்தையும், இதில் இணைந்துள்ள ஒவ்வொருவரையும் பார்க்கும்போது, இது அனைவருக்கும் மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பான பயணமாக அமையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தப் படத்தில் இணைந்துள்ள அனைவரும் அதே உணர்வோடு பணியாற்றி வருகின்றனர். தனுஷ் சார் முதல், ஷ்ரேயாஸ் மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களும் இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக, மம்முட்டி சார், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன் சார் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். அனைவரின் பங்களிப்பாலும் படம் மிகவும் சிறப்பாக உருவாக வருகிறது.

இந்தப் படத்தின் பின்னணியில் மிகப்பெரிய தொழில்நுட்பக் குழு பணியாற்றி வருகிறது. ஒளிப்பதிவாளர், கேமரா குழு, தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.  ஒளிப்பதிவாளர் எழிலரசு மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பாளராக ‘அமரன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படங்களின் படத்தொகுப்பாளர் கலை பணியாற்றி வருகிறார். இந்த தலைப்பு அறிவிப்பு வீடியோவையும் அவர்தான் தொகுத்துள்ளார்.

Continues below advertisement

இந்த வீடியோவை வெறும் தலைப்பு அறிவிப்பு வீடியோவாக மட்டும் பார்க்கக் கூடாது. ஒரு போஸ்டரை வெளியிடுவதற்கு பதிலாக, தனுஷ் சார் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் முயற்சியாக இதை உருவாக்கியுள்ளோம். படத்தின் டீசர், ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்திற்கான அறிமுக டீசர்கள் மற்றும் பிரதான டிரெய்லர் ஆகியவை அடுத்த சில வாரங்களிலும், வரும் மாதங்களிலும் வெளியாகும்.

அக்டோபர் 16 இந்தப் படத்திற்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். அந்த நாளில்தான் படம் வெளியாக உள்ளது. மேலும், படத்திற்கு ‘ஓம்: சேப்டர் 1’ என்று பெயரிட்டுள்ளோம். இது ஆன்மீகமான தலைப்பு மட்டுமல்ல; மிகவும் சிறப்பான, பல அடுக்குகளைக் கொண்ட அர்த்தமுள்ள தலைப்பாகும். இந்த தலைப்பிற்குள் பல சுவாரஸ்யமான அம்சங்களும், பல்வேறு அடுக்குகளும் உள்ளன. அவை படிப்படியாக ரசிகர்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.”