72 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஜூலை 16 ஆம் தேதி  அறிவிக்கப்பட்டன. 2024 இல் இந்திய மொழிகளில் வெளியான படங்கள், நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டது. தமிழில் ராயன் , அமரன் , கேப்டன் மில்லர் , மகாராஜா ஆகிய படங்களுக்கு வெவ்வேறு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டது.

Continues below advertisement

ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருது அறிவிப்பு வெளியாகையில் அதைத் தொடர்ந்து சர்ச்சையும் உருவாவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ் திரைப்படங்கள் 10 விருது அறிவிக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  திரைப்படஇயக்குநர்மோகன்ஜிதேசியவிருதுதேர்வுக்குழுகுறித்ததனதுவிமர்சனத்தைபதிவுசெய்துள்ளார்

தவெக ஆட்சியில் தமிழ் திரைத்துறை பற்றி

சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது, "தவெக ஆட்சி வந்த பிறகு திரைப்படங்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் சுதந்திரமாக வெளியாகின்றன. முன்பு ரெட் ஜெயன்ட் மூலம் மாதத்திற்கு நான்கு படங்கள் வெளியானதால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. தற்போது அந்த நிலை இல்லை என்றார்.

Continues below advertisement

நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்?

ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு சென்சார் கட்டாயம் என்ற முடிவை வரவேற்ற அவர், ஓடிடி துறையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். அது பாஜகவில் சேர்வதற்காக அல்ல. மத்திய அரசு ஆதரவு அளிக்கும் வேவ்ஸ் போன்ற ஓடிடி தளங்களைப் போல தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

தேசிய விருது அறிவிப்பு குறித்து 

தேசிய திரைப்பட விருதுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் இருப்பதாக நீண்ட காலமாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த ஆண்டு விருதுகள் வழங்கப்பட்ட திரைப்படங்களின் வரிசையை பார்க்கும் போது அந்த விமர்சனத்தை நானும் நம்புகிறேன். தேசிய விருதுகள் மற்றும் கோவா திரைப்பட விழா விருதுகள் வழங்கும் முறையில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த தேர்வாளர்களும் இதற்கு காரணமாக உள்ளனர்" என தெரிவித்தார்.