சினிமா படப்பிடிப்பில் 10 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் பிஸியாக நடித்துவரும் வடிவேலுவை வைத்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் காமெடியா? லவ் ஸ்டோரியா? என அறிந்துக்கொள்வதில் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.


காதல் மற்றும் ஸ்டைல்லான படங்களை இயக்குவதில் வல்லவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். சிம்புவை வைத்து இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு இளைஞர்களின் ஆதரவு பெருமளவில் இருந்ததோடு, பல காதலர்களுக்கு லவ் ஃப்ரோபோஸ் பண்றதுக்கும் இப்படம் உதவியாக இருந்தது. இதோடு மின்னலே, வாரணம் ஆயிரம், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்ற படங்களில் இயக்கி மக்கள் மனதில் நீங்கா ஒர் இடத்தைத் தக்க வைத்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கிய சூப்பர் ஹிட் காதல் படமான வாரணம் ஆயிரம் தேசிய விருதையும், தங்க மீன்கள் சிறந்த தமிழ்ப்படத்திற்கான விருதையும் பெற்றுதந்துள்ளது.





இப்படி எப்போதும் காதல் படங்கள் மற்றும் வித்தியாசமாக கதைக்களத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், தனது பாணியில் இருந்து விலகியிருப்பது என்று சொன்னால், அது சிம்பு நடித்துவரும்வெந்து தணிந்த காடு திரைப்படத்தின் மூலம் தான். வித்தியாசமாக கதைக்களத்தோடு சிம்புவை வைத்து  இயக்கப்பட்டுவரும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.  இந்நிலையில் தான் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், வடிவேலுடன் ஒரு படத்தில் இணைவது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்டியில், வடிவேலுவை வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவதாகவும், இப்படம் நகைச்சுவை காதல் படமாக இருக்கும் எனவும் அவரால் நிச்சயம் திறம்பட நடிக்கமுடியும் என தெரிவித்துள்ளார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.


ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளாக சினிமாத்துறை பக்கமே வராமல் இருந்த வடிவேலு, நாய் சேகர் ரிட்டன்ஸ் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். எனவே விரையில் இயக்குநர் கௌதம் மற்றும் வடிவேலு இணைவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் இப்படம் லவ் ஸ்டோரியா? அல்லது காமெடி படமாக இருக்குமா? என்ற எதிர்ப்பார்ப்பை இயக்குநரின் பேச்சு தெளிவுப்படுத்தி இருந்தாலும், என்ன மாதிரியான கதைக்களம் அமைந்திருக்கும் என தெரிந்துக்கொள்வதில் அதிக ஆர்வம் எழுந்துள்ளது. 





தற்போது கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு நடித்துவரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கிவருகிறார். இதனையடுத்து வடிவேலுவை வைத்து படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் காமெடியின் லெஜன்ட் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைவது எப்போது இருக்கும்? என்ற ஆவலுடன் இருவரின் ரசிகர்களும் காத்துள்ளனர்.