தமிழ் சினிமாவில் உள்ள ஒவ்வொருவரும் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றால் அது முதலமைச்சர் விஜயின் ஆட்சியி மட்டும் தான் நடைபெறும் என இயக்குநர் சேரன் புகழாரம் சூட்டியுள்ளார். 

Continues below advertisement

சினிமா நிகழ்வில் சேரன் பேச்சு

சென்னை வடபழனியில் தென்னிந்திய சினிமாவின் பத்திரிக்கை தொடர்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ராஜ்மோகன் கலந்துக் கொண்டார். இந்நிகழ்வில் சினிமாவின் பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் இயக்குநர் சேரன் அமைச்சர் ராஜ்மோகனிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். 

Continues below advertisement

சினிமாவை புரிந்த ஒருவர் அமைச்சர் ராஜ்மோகன்

அவர் பேசும்போது, “தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் அமைச்சர் ராஜ்மோகனிடம் வேண்டுகோளை வைக்கின்றனர். நாங்கள் எழுத்தாளர்கள் சங்கத்திற்கு வந்திருக்கிறோம். எங்களிடமும் சில கோரிக்கைகள் உள்ளது. ஆனால் அதனை சுயநலமாக இங்கே கேட்க விரும்பவில்லை. திரை துறையில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. வெளியே பார்க்கும்போது ஒவ்வொருவரும் சிரிப்பது போல தோன்றும். ஆனால் தனியாக வீட்டுக்குச் சென்றால் ஒவ்வொருவரும் ஒரு யோசனையில் மூழ்கியிருப்போம். ஒரு தயாரிப்பாளர் படத்தை எடுத்து அதனை ரிலீஸ் செய்வதில் ஆயிரம் தடைகளும், பிரச்னைகளும் இருக்கிறது. ஒரு படம் எடுக்கும் இயக்குநர் அதனை முடிப்பதற்குள் நிறைய சிரமம் இருக்கும். இந்த துறையை புரிந்துக் கொண்ட ஒருவரை அமைச்சராக நியமித்த முதலமைச்சர் விஜய்க்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

Also Read: தமிழ்நாட்டில் இனி திராவிடம் தலை எடுக்காது.. இயக்குநர் மோகன் ஜி காட்டமான பதிவு!

விஜய் ஆட்சியில் தான் விடிவுகாலம்

அப்படிப்பட்டவர்களால் தான் இதனை தீர்க்க முடியும். இதற்கு முந்தைய ஆட்சியில் எத்தனையோ கோரிக்கைகளை நாங்கள் வைத்தோம். சில நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நிறைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. காரணம் பக்குவமாக உட்கார்ந்து பேசவில்லை. இந்த தவெக அரசு ஒரு குழு ஒன்றை உருவாக்கி என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது, அதை எப்படி தீர்ப்பது என்பதை ஆலோசிக்க வேண்டும். 

படம் தயாரிக்கும்போது அனைத்து விதமான வரிகளையும் செலுத்தி விடுகிறோம். அதனை ரிலீஸ் செய்ய தடுமாறும்போது யாரும் வாழ்க்கைக் கொடுப்பதில்லை. அப்படியாக எல்லாரும் பிழைப்பதற்கான வழியை அரசு உருவாகக் வேண்டும். ஒருநாள் திரைத்துறையில் எல்லாரும் நல்லா இருக்காங்க என்ற நிலை வர வேண்டும் என்றால் அது முதலமைச்சர் விஜயின் ஆட்சியில் நடந்தால் தான் உண்டு. அவர் மூலமாக மட்டும் தான் எங்களுக்கு விடிவு காலம் வரும் என நம்புகிறேன். இதற்கான முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என சேரன் தெரிவித்தார்.