மெளனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இயக்குநர் அமீர். சூர்யாவின் கரியரில் ஒரு கேம் சேஞ்சராக அமைந்த படம் மெளனம் பேசியதே. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மெனம் பேசியதே ரீரிலீஸை ஒட்டி நடிகர் சூர்யாவுடனான நட்பு குறித்து அமீர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்

Continues below advertisement

சூர்யாவுடனான நட்பை முடித்துக் கொண்டது பற்றி அமீர் 

மெளன் பேசியதே படம் வெளியானபோது நான் மதுரையில் இருந்தேன். நள்ளிரவு படம் பார்த்துவிட்டு சூர்யா எனக்கு ஃபோன் செய்தார். படம் பார்த்தேன் மக்கள் ரொம்ப ரசித்து கொண்டாடுகிறார்கள் என்றார். நான் அப்படியா என்று கேட்டேன். நான் உற்சாகப்பட வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் நான் அப்படியா என்று கேட்டது அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் நாம் எது செய்தாலும் அதன் பிறகு எல்லாமே தப்பாதான் தெரியும். சூர்யா என்னைவிட ஒரு வயது மூத்தவராக இருக்கலாம். நந்தா படத்தின் போது எனக்கும் அவருக்கு நல்ல நட்பு இருந்தது. எனக்கு அவர் ஹீரோ கிடையாது. நான் அவரை எப்போதுமே ஹீரோவாக பார்த்ததில்லை நண்பராக தான் பார்த்திருக்கிறேன். நாங்கள் நேரில் சந்தித்துக்கொள்ளும் போது வாங்க ஜீ என்றுதான் பேசிப்போம். நானும் சசிகுமாரும் தி நகரில் தான் தங்கி இருந்தோம். அப்போது எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. நான் சூர்யாவுக்கு தான் அப்போதும் ஃபோன் செய்தேன். என்னை மருத்துவமனையில் வைத்திருந்தார்கள். எனக்கு மருத்துவமனையில் பிடிக்கவில்லை. அதனால் சூர்யாவுக்கு ஃபோன் செய்து என்னை இங்கிருந்து கூட்டிப் போக சொன்னேன். அப்போது அவர் ஶ்ரீ படம் படப்பிடிப்பில் இருந்தார். என்னை வந்து மருத்துவமனையில் இருந்து அழைத்து போய் காலையில் மறுபடியும் மருத்துவமனைக்கு கூட்டிப்போனார். அந்த மாதிரியான நட்பு தான் எங்களிடையில் இருந்தது. பொதுவாக சினிமாவில் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டி இருக்கிறது. அப்படிதான் அவரை சார் என்று அழைக்க சொன்னார்கள். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. என்னுடைய அடிப்படை குனம் என்னை அப்படி நடிக்க விடவில்லை.

Continues below advertisement

என்னுடைய நட்பு வட்டத்தில் இருந்து நான் விலகுகிறேன் என்றால் அது அவர்கள் தப்பாக இல்லை. என் தப்பாக இருக்கும். அதை உணர்ந்து தான் நான் விலகுகிறேன். அப்படி தான் சூர்யாவிடம் இருந்து விலகினேன். பாலாவிடம் இருந்தும் சீமானிடம் இருந்தும் அப்படிதான் விலகினேன். தமிழ் தேசியத்தின் அடிப்படையில் தான் நாங்கள் இருவரும் பழகினோம். ஆனால் எங்களுடைய இருவரது அரசியல் பார்வையும் வேவ்வேறாக இருந்ததால் அவரிடம் இருந்து தான் விலகிக் கொள்கிறேன். சூர்யா தற்போது வேறொரு உயரத்தில் இருக்கிறார். நான் அவருடன் இருந்துகொண்டு அவருக்கு தொந்தரவாக இருக்க விரும்பவில்லை.