நடிகர் தனுஷ் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று அதிகாலை தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார். ஆன்மீக பக்தர்கள் மற்றும் அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் அவரோடு நின்று செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
திருவண்ணாமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு சில தினங்களாக நடிகர் தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ திரைப்படத்தின் பட காட்சிகள் படமாக்கப்பட்ட வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு நடிகர் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் வருகை தந்தார். முன்னதாக சம்பந்த விநாயகரை தரிசனம் செய்தார்.
அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற கோ கோபூஜை பசுவுக்கு அகத்திக்கீரை கொடுத்தார். இதனைத் தொடர்ந்து யாக பூஜையில் கலந்து கொண்டார். தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் நவகிரகத்தை தரிசனம் செய்தார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடிகர் தனுசுக்கு மாலை அணிவித்து பிரசாதங்களை வழங்கினார்.
அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் அவரோடு செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சமீபத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனியார் கல்லூரியில் ரசிகர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மேடையில் தனுஷின் பேச்சு அரசியலுக்கு வருவதை போன்றே இருந்தது. விஜய் கட்சி தொடங்கி வெற்றி பெற்றதை போல, தானும் எதிர்காலத்தில் கட்சி தொடங்கி தமிழக அரசியலில் நுழைய வேண்டும் என்று எண்ணத்துடன் இருப்பதாகவும் ஆனால், இது நடப்பது அவ்வளவு சாத்தியமில்லை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
