தனுஷ் இயக்கும் நான்காவது படம்:


தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல்வேறு முகங்களை கொண்டவர். அந்தவகையில் தன்னுடைய 50 வது படமான ராயன் படத்தை இவரே இயக்கி நடித்தார். இந்த படம் வசூலிலும் சாதனை படைத்தது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தனுஷுக்கு இரண்டு செக் வழங்கினார் தயாரிப்பாளர் காலநிதி மாறன். ஒன்று நடிகர் தனுஷுக்கு மற்றொன்று இயக்குனர் தனுஷுக்கு என்றார். 


இதனைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கும் அடுத்த படம் எது என்ற கேள்வி எழுந்தது. அதாவது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் தான் தற்போது இயக்கி வருகிறார் தனுஷ். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், படத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஸ்பாரோவ் பாடல், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


மேலும் இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மத்தியில் இப்போதே நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் இவரது இயக்கத்தில் வெளிவரவுள்ள மூன்றாவது படம். இதையடுத்து இவரது இயக்கத்தில் நான்காவதாக ஒரு படம் உருவாகவுள்ளது.


தனுஷுடன் இணையும் நித்யா மேனன்:


தனுஷ் இயக்க உள்ள நான்காவது படத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் டிடி4 என்ற பெயரில் உருவாக உள்ளது. அதேபோல் இந்த படத்தில் பெண் கதாபாத்திரம் தொடர்பானா கதை என்றும் நடிகை நித்யா மேனனுக்கு முன்னுரிமை அளிக்கும் கதையாக இருக்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த படத்தில் அருண் விஜய், அசோக் செல்வன் மற்றும் ராஜ் கிரண் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


முன்னதாக நித்யா மேனன் நடிகர் தனுஷ் உடன் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திற்காக தேசிய விருதை வாங்கி இருந்தார். அதனால் இருவரும் இணையும் புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து உள்ளது ரசிகர்களிடம். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.