2018 ஆம் அண்டில் இல்வாழ்க்கைக்குள் நுழைந்த பாலிவுட் காதல் ஜோடி, ரன்வீர் சிங்-தீபிகா படுகோன். இன்ஸ்டாவில் ஒன்றாக போட்டோக்களை எடுத்து வெளியிட்டு அடிக்கடி கப்புள்-கோல்ஸ் செய்து வந்த இவர்கள், நேற்று கத்தாரில் நடந்த ஃபிஃபா உலகக்கோப்பையையும் நேரில் கண்டு ரசித்தனர். 


ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி போட்டியில் நேற்று அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தின. இதில் பங்கேற்ற தீபிகா படுகோன் மற்றும் முன்னாள் கால்பந்து வீரர் இக்கர் காசிலாஸ் உலகக்கோப்பையை ரசிகர்கள் முன்னர் திறந்து வைத்தனர்.


 




”ரணகளத்திலும் கிளுகிளுப்பு…”


இதையடுத்து, போட்டியை தனது கணவருடன் சேர்ந்து கண்டு ரசித்தார் தீபிகா. ஆரம்பத்தில் ஆமை போல் நகர்ந்த போட்டியின் வேகம், கடைசி நிமிடங்களில் சூடு பிடிக்க ஆரம்பித்தது.


இதனால், போட்டியை கண்டவர்கள் திக்-திக் என பயத்தில் போட்டியைக் காண, தீபிகாவை பின்னால் இருந்து அணைத்தபடி விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தார் ரன்வீர் சிங்.


இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரக்க விட்ட நெட்டிசன்கள், “ரணகளத்திலும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதா” என நகைச்சுவைகயாக கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ, இந்த ஜோடிக்கு ஹார்டின்களையும் அம்புகளையும் பறக்க விட்டு வருகின்றனர். 






பதான் பிரச்சனை:


ஷாருக்கானிற்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க, அடுத்த வருடம் வெளியாக உள்ள படம் பதான். கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு, ஷாருக்கான் நடித்துள்ள படம் பதான் என்பதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் எகிறி வருகிறது. ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி வெளியான பதான் டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. சில நாட்களுக்கு முன்னர், பதான் படத்தின் பாடல் ஒன்று வெளியானது. அதில், தீபிகா படுகோனே, காவி நிறத்தில் பிக்கினி போன்ற உடை உடுத்தியிருந்தது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் மற்றும் மத்திய பிரதேச சபாநாயகர், அந்த காவி நிறத்தை மாற்ற வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தனர். அந்த காவி நிறத்தை மாற்றவில்லை என்றால், மத்திய பிரதேசத்தில் பதான் படம் வெளியாவது சந்தேகம்தான் என்ற கருத்தும் நிலவி வருகிறது.