விஜய் டிவியில் சீரியல் நடிகை பிரவீணா புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 


விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும்  'ராஜா ராணி' சீரியலில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிப்பவர்
நடிகை பிரவீணா. தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள இவர் பல படங்களில் துணைகதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.






இந்த நிலையில்,இவரது புகைப்படங்களை சிலர் சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் இது குறித்து அவர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரை பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்தத் தேடுதல் வேட்டையில் முதற்கட்டமாக கன்னியாக்குமரியைச் சேர்ந்த மணிகண்டன் சங்கர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 






இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய டெல்லி நாக்பூரைச் சேர்ந்த பாக்யராஜ் என்ற கல்லூரி மாணவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.