விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அசீம் மகுடம் சூடினார். இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள், நெகட்டிவ் விமர்சனங்களை எழுந்து கொண்டே இருக்கிறது. அவருக்கு கொடுக்கப்பட்ட டைட்டில் வின்னர் பட்டம் நியாயமானது அல்ல என பல தரப்பில் இருந்தும் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.   


 



 


செட்டில் பாதுகாப்பு இல்லை :


அந்த வகையில் அசீம் குறித்த பல அதிர்ச்சியான தகவல்களை அவருடன்  நடித்த நடிகர் நடிகைகள் கூறியது மிகவும் பரபரப்பாக சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பட்டு வந்த தொடர் 'பூவே உனக்காக'. சமீபத்தில் தான் இந்த தொடர் வேகவேகமாக முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சுபத்ரா அளித்த பேட்டியில் அசீம் பற்றி பல அதிர்ச்சியான தகவல்களை பகிர்ந்து இருந்தார். சீரியலில் முதலில் பூவரசியாக நடித்தது ராதிகா ப்ரீத்தி. அவருக்கும் அசீமுக்கும் இடையில் ஏரளமான சண்டை, வாக்கு வாதங்கள்  நடந்தன. ஹீரோயினை அசீம் 'வெளில போடி' என கத்திவிட்டார். என்ன வாடி போடினு பேசுறீங்க மரியாதையா பேசுங்கள் என அழ ஆரம்பித்துள்ளார். அதற்கு அசீம் செருப்பால அடிப்பேன் என சொல்லியுள்ளார். கோபமடைந்த அந்த பெண் நான் ஹைதராபாத்தில் இருந்து இங்கு நடிக்க வருகிறேன். ஆனால் எனக்கு இந்த செட்டில் பாதுகாப்பே கிடையாது. செருப்பால அடிப்பேன், கன்னா பின்னா என வார்த்தைகளை பேசுகிறான் நான் எப்படி நடிப்பது என வருத்தமடைய அந்த சீரியலில் நடித்த பெண்கள் அனைவருக்கும் கோபம் வந்தது. இது முதல் தடவை அல்ல. பல முறை இது போல நடந்துள்ளது. பெண்கள் அனைவரும் சேர்ந்து அவர் மன்னிப்பு கேட்காமல் நாங்கள் நடிக்க மாட்டோம் என கூறிவிட்டு ஒரு அறையில் போய் உட்கார்ந்து கொண்டோம். காலை முதல் மாலை வரை அசீம் வந்து மன்னிப்பு கேக்கவே இல்லை" என்றார் சுபத்ரா.


 






சக மனிதனை மதிக்காதவர் : 


மேலும் அந்த சீரியலில் நடித்த நடிகர் அருண்குமார் ராஜன் அசீம் பற்றி பேசுகையில் "அசீமுக்கு எப்பவுமே கெத்தாக நடிக்க வேண்டும் என்றே ஆசைப்படுவார். வசனங்களில் கூட 'டா' போட்டு பேசக்கூடாது. அதை மாற்றுங்கள் என்பார். அவரால் ஏராளமான ஆர்ட்டிஸ்ட் சீரியலில் இருந்து விலகியுள்ளனர். லேடி ஆர்டிஸ்ட்களை எல்லாம் தப்பு தப்பாக பேச கூடியவர். ஏற்கனவே நடித்த ஹீரோயினுடன் பிரச்சனை செய்தார். அவர் விலகியது அடுத்தாக வந்த புதிய ஹீரோயினையும்  தகாத  வார்த்தைகளால் திட்டியுள்ளார். பூவே உனக்காக சீரியலில் இறுதியில் ஒரு 70 எபிசோட்களில் மட்டுமே நடித்திருந்தார். அதுவரையில் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக ஒரு குடும்பமாக சேர்ந்து நடித்து வந்தோம். ஆனால் அசீம் வந்த பிறகு ஒரு பிரச்சனையாகவே இருந்தது. ஒரு சக மனிதனை மனிதனாக மதிக்காதவர்" என்றார் அருண்குமார் ராஜன்.