நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மகான். இந்தப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்த பொன்னியின் செல்வன் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையே  விக்ரம் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 


 






இந்தப்படத்தை ஸ்டியோ கீரின் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் நிலையில், அந்தப்படத்திற்கான பூஜையும் போடப்பட்டது. அப்போது பேசிய பா.ரஞ்சித், “ மிக அற்புதமான நடிகரான விக்ரமுடன் இணைந்து பணியாற்ற போகிறேன் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் கே.ஜி.எஃப் -ல் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்தே இந்தப்படம் எடுக்கப்பட இருக்கிறது. நிச்சயம் இது ஒரு சவாலான படமாக இருக்கும்” என்று பேசியிருந்தார். 


 






இந்தப்படத்திற்கான எழுத்து பணிகள் மும்மரமாக நடந்து வந்த நிலையில், இன்று அந்தப்படத்தின் டெஸ்ட் ஷூட் நடந்துள்ளது. அது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் இந்தப்படம்  3டியில் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 


 






‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில்  ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப்படத்தில் நடிகை துஷாரா விஜயனின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.